தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நேற்று நடைபெற்று விஷால் அணியினர் வெற்றி பெற்றது மற்ற சங்கத்தின் உறுப்பினர்களையும் யோசிக்க வைத்துள்ளது.

கடந்த பத்து வருடங்களாக சரத்குமார்-ராதாரவின் பிடியில் இருந்த சங்கத்தை விஷால் தைரியமாக முன்வந்து மீட்டதுபோல் நமது சங்கத்தையும் மீட்க வேண்டும் என பல சங்கங்களின் உறுப்பினர்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக தென்னிந்திய திரைபட ஒளிப்பதிவு இயக்குனர் சங்கத்தில் கடந்த 10 வருடமாக தேர்தல் நடத்தவில்லை என அச்சங்கத்தின் உறுப்பினர்கள் புலம்பி வருவதாகவும் விரைவில் இதற்கு ஒரு விடிவு காலம் வரும் என்றும் கூறப்படுகிறது.

இதன் முதல்படியாக தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவு இயக்குனர் சங்கத்தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தில் பிசி ஸ்ரீராம் தலைமையில் ஒரு அணி தயாராகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Related Images: