ஜெயம் ரவி நடித்த ‘தனி ஒருவன்’ படம் ஹிட்டானதில் ஹீரோ ஜெயம் ரவிக்கு எப்படி வாய்ப்புகள் குவிய ஆரம்பித்திருக்கிறதோ, அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் அப்படத்தில் வில்லனாக நடித்த அரவிந்த் சாமிக்கும் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்திருக்கிறது.

ஆனால் அவரோ பிசினஸ் தான் முக்கியம், சினிமாவெல்லாம் ஹாபி தான் என்று பல படங்களை தவிர்த்து வருகிறார். புதுப்படங்களை தவிர்ப்பது அவருடைய முடிவு என்றாலும், அதே படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வதில் தான் பெரும் பிரச்சனையாகியிருக்கிறது.

தெலுங்கிலும் வில்லன் வேடத்தில் அரவிந்த் சாமி தான் வேண்டும் என்று அவரிடம் பேசியிருக்கிறார்கள். அவர் மறுத்து விட அவருக்குப் பதில் மாதவனை நடிக்க வைக்க திட்டமிட்டார்கள்.

முதலில் சம்மதம் சொன்ன அவர் பின்னர் மறுத்து விடவே இப்போது மீண்டும் அரவிந்த் சாமியிடம் போயிருக்கிறது ரீமேக் டீம். முடியாது என்று திருப்பி அனுப்பியவரை தொடர்ந்து நச்சரித்ததால், நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். அதற்கான அவர் கேட்ட தொகையைக் கேட்டுத்தான் ஆடிப்போயிருக்கிறது ரீமேக் டீம்.

அதிகமில்லீங்க 3 கோடி தான்

இப்படி அதிக சம்பளம் கேட்டால் நச்சரிப்பவர்கள் ஓடிவிடுவார்கள் அர்விந்த்சாமியின் ஐடியாவாம்

Related Images: