மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற படம் ‘தனி ஒருவன்’. இப்படத்தின் வெற்றிக்கு அர்விந்த் சாமி நடித்த வில்லன் கேரக்டரே முக்கிய காரணமாக கருதப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஜெயம் ரவி கேரக்டரில் சமீபத்தில் வெளியான ‘புரூஸ்லி’ படத்தில் நடித்த ராம் சரண் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இவருக்கு வில்லனாக, அரவிந்த் சாமி கேரக்டரில் நடிக்க முதலில் மாதவனை அணுகினர், ஆனால் அவர் ஒத்துக் கொள்ளாத காரணத்தால் நாகார்ஜூனாவிடமும் பேச்சு வார்த்தை நடைபெற்றது, ஆனால் அதுவும் தோல்வியடைந்தது. தற்போது அரவிந்த் சாமியிடமே வில்லனாக நடிக்க சம்மதம் கேட்டுள்ளனர்.

இப்படத்தின் தயாரிப்பாளர் ஒருவாறு அரவிந்த் சாமியை சமாதானம் செய்து அவரே நடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதால் அவரும் ஒத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

அதனால் தமிழ் திரையுலகில் வெற்றி பெற்றது போலவே தெலுங்கிலும் ‘தனி ஒருவன்’ திரைப்படம் மிகப் பிரமாண்டமாக வெற்றி பெறும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை

Related Images: