மெகாஸ்டார் சிரஞ்சீவி நீண்ட வருடங்களுக்கு பிறகு தெலுங்கு படத்தில் நடிக்க இருகின்றார். A.R. முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து தமிழில் மாபெரும் வெற்றிபெற்ற “கத்தி” படத்தின் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக தகவல் வந்தது.

ஆனால் தற்போது கவுண்டமணி நடிப்பில் தமிழில் வெளிவந்த ’49 ஒ’ படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியிருப்பதாக தகவல் வந்துள்ளது.

அறிமுக இயக்குனர் ஆரோக்கியதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் கவுண்டமணி நடித்த ’49ஓ’ என்ற திரைப்படம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டாகியது. இந்த படம் அஜித், விஜய் போன்ற பெரிய ஸ்டார்கள் நடித்திருந்தால் படத்தின் லெவலே வேறு என்று விமர்சனம் செய்யப்பட்ட நிலையில் தற்போது உண்மையிலேயே மெகா ஸ்டார் இந்த படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை சிரஞ்சீவி வாங்கியுள்ளதாகவும், தனது 150வது படமாக இந்த படத்தில் அவர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விவசாயிகள், ரியல் எஸ்டேட், மற்றும் தேர்தல் கமிஷன் என பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கியிருக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவி போன்ற மெகா ஸ்டார் நடித்தால் சூப்பர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Images: