வேதாளம் படம் வெளிவந்து அஜித்தே எதிர்பாராத அளவில் இந்த வெள்ளக் காலத்திலும் ஓடி ஹிட்டாகி விட்டது. அஜித்துக்கு ஒத்தே வராது என்று கூறப்பட்ட தங்கச்சி சென்ட்டிமன்ட்டும் அவருக்கு இப்படத்தில் வொர்க் அவுட் ஆகிவிட்டது.

படத்தின் வெற்றியை இப்படி எல்லாரும் மகிழ்வாகக் கொண்டாட இயக்குனர் சிவா மட்டும் விரக்தியாய் சிரிக்கிறார். நெருங்கி விசாரித்தால் தெரிகிறது அவருக்கு பாதிச் சம்பளம் தரப்பட்டதோடு நின்றுவிட்டிருப்பது.

மீதிச் சம்பளத்தைக் கேட்டு தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் ஆபீசுக்கு நடையாய் நடந்தும், செல்லால் பேசியும், வாட்ஸப்பில் தூது விட்டும், இப்படிப் பல விதங்களில் முயற்சி செய்தும் ஏ.எம்.ரத்னம் கண்டுகொள்ளவேயில்லையாம். அத்தோடு தனது மகன் ஜோதிகிருஷ்ணாவை மீண்டும் இயக்குனராக்கி, கோபிசந்த் நடிக்கும் தெலுங்குப் படம் ஒன்றுக்கு பூஜை போட்டுவிட்டிருக்கிறார்.

வேதாளம் சிவாவிடம் அஜித்திடம் போய்ச் சொன்னால் தீர்வு கிடைக்கும் என்று பலரும் அறிவுறுத்த முதலில் தயங்கி வந்த சிவா இப்போது அஜீத்திடம் முறையிடும் எண்ணத்திற்கு வந்திருக்கிறாராம்.

Related Images: