`தேவயாணியின் கணவரும் சோலோ ஸ்டார் என்று தனக்குத்தானே கேவலமான பட்டப்பெயர் வைத்துக்கொண்ட ராஜகுமாரனுக்கு ஜோடியாக நான் நடிக்கப்போவதாக யார் எழுதினாலும், அவர்களது அட்ரஸ் வாங்கி வீடு தேடிவந்து உதைப்பேன்“ என்கிறார் சமந்தா.

விஜய் மில்டன் இயக்கவிருக்கும் ஒரு புதுப்படத்தில் சமந்தா ராஜகுமாரனுக்கு ஜோடியாக நடிப்பதாக இயக்குநராலேயே செய்தி ஜோடிக்கப்பட்டது. இவர் இதற்கு முன்பு இயக்கிய பத்து எண்றதுக்குள்ள படத்தில் நாயகியாக நடித்தவர்தான் சமந்தா. ’10 எண்றதுக்குள்ள’ படத்துக்கு முன்பாகவே, டி.ராஜேந்தரை நாயகனாக வைத்து ஒரு கதையை விஜய் மில்டன் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. டி.ராஜேந்தர் நாயகனாக நடிக்கவிருந்த அப்படத்தில் தற்போது நாயகனாக ஒப்பந்தமாகி இருக்கிறார் ராஜகுமாரன். இப்படத்தில் பரத் வில்லனாக நடிக்க இருக்கிறார். ’10 எண்றதுக்குள்ள’ படத்தில் நாயகியாக நடித்த சமந்தா, இப்படத்தில் ராஜகுமாரனுக்கு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளியாகின. விஜய் மில்டன் கேட்டுக் கொண்டதால் இப்படத்தை சமந்தா ஒப்புக் கொண்டதாகவும் கூறினர். இது குறித்து சமந்தாவிடம் கேட்ட போது, “அய்யய்யோ.. எனக்குத் தெரியவே தெரியாது. அப்படிப்பட்ட செய்திகளை எழுதாதீர்கள். இப்படி ஒரு படத்தை நான் ஒப்புக் கொள்ளவே இல்லை” என்றார். இந்த மாதம் தொடங்கவிருக்கும் இந்தப் படத்தில் ராஜகுமாரன், பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

விளம்பர வெறியில என்னவெல்லாம் பண்றாங்க பாருங்க மக்களே…

Related Images: