தமிழ்சினிமாவை ஒட்டுமொத்தமாக கைக்குள் போட்டுவரும் ராஜபக்‌ஷேயின் பினாமி நிறுவனமான லைக்காவுடன் கமலும் கைகோர்த்தார். லைகா நிறுவனத்துடன் இணைந்து தொடர்ந்து இரு படங்கள் செய்யப்போவதாக கமல் அறிவித்துள்ளார்.

“நீங்க சரினு போன் பண்ணி சொன்னா போதும், ‘மருதநாயகம்’ தொடங்கிடலாம்’ என்கிறார் லைகா சுபாஷ்கரன். ஆனால், அந்தப் படத்தைத் தொடங்குவதற்கு முன்பான தயாரிப்பு வேலை பெருசு. அவர் என் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதற்காக, எப்படி வேண்டுமானாலும் இழுத்துவிட்டு விளையாட முடியாது. இப்போது ‘மருதநாயகம்’ ஆரம்பித்தால் முடிக்க ஒரு வருடத்துக்கு மேலாகிவிடும். ஆனால், இப்போது வேறு ஒரு படம் பண்ணுகிறோம். ராஜ்கமல் பண்ணுகிறது. இதில் லைகாவும் சம்பந்தப்பட்டு இருக்கிறது. அதன் பிறகுதான் மருதநாயகம்,’ என்றார். அதாவது முதல் படத்தை லைகாவுக்கு முதல் பிரதி அடிப்படையில் கமல் தயாரிப்பார் என்று தெரிகிறது.

மருதநாயகத்தை மிகப் பிரமாண்டமாக இயக்கி, சுபாஷ்கரன் கோஷ்டிகளை தெருவுக்கு கொண்டுவரும் ஒரு வாய்ப்பாக இதை கமல் ஏற்றிருப்பாரோ என்றும் யோசிக்கவேண்டியுள்ளது.

Related Images: