சிம்புவின் பீப் பஞ்சாயத்துக்குப்பின்னர் எந்த விழாவுக்கும் போகாமல் வாலைச் சுருட்டிக்கொண்டு விட்டிலேயே முடங்கிக் கிடந்த வாயாடி.ராஜேந்தர்  பி.டி.செல்வக்குமார் தயாரிப்பில் ஜீவா,ஹன்ஷிகா நடித்த `போக்கிரி ராஜா` பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஆஜரானார்.

ஆனால் போக்கிரிராஜா சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டுக்கு வந்தவர், பரம சைலண்ட்டாகதான் தன் பேச்சை ஆரம்பித்தார். அதற்கப்புறம் தான் பல மேடைகளில் பேசிய அதே சவடால் பேச்சை அங்கும் தொடர்ந்தார் என்பது வேறு விஷயம். ஆனால் அதையும் தாண்டி அவருக்குள் ஒரு விரக்தி, வேதனை, எரிச்சல் எல்லாம் இருந்தது மட்டும் நிதர்சனம். “என்னை இங்கு பேச கூப்பிட்டவே, நான் இந்த படத்தின் தயாரிப்பாளர் செல்வகுமாரிடம் சொன்னேன். நான் வர்றேன். ஆனால் பேச மாட்டேன். ஏன்னா புலி சமயத்துல நான் பேசிய பேச்சை மக்கள் எப்படி வேறு மாதிரி ட்விஸ்ட் பண்ணினாங்கன்னு எனக்குத் தெரியும். என் பேச்சை ஒளிபரப்பிய அதே தொலைக்காட்சியே அதற்கப்புறம் அதை கிண்டல் பண்ணிச்சு”. அதைப்பார்த்து துடிச்சேன்.மனசுக்குள்ளேயே வெடிச்சேன்.அழுகையே வராத மாதிரி நடிச்சேன்.

அதனால அந்த புலி மேட்டருக்கு பிறகு நான் எந்த மேடையிலும் பேசுறதாவே இல்ல. இங்கு வரும்போதும் அப்படிதான் சொன்னேன். ஆனால் என்னை கட்டாயப்படுத்தி பேச வச்சுட்டீங்க ” என்றார் கவலையோடு.

டி.ஆருக்கு முன்னதாக பேசிய தயாரிப்பாளர் செல்வக்குமார் புலி பட ரிலீஸுக்கு டி.ஆர். மிகப்பெரிய பக்கபலமாக இருந்தார் என்று பக்கா மேளம் வாசித்தார்.

Related Images: