சிம்பு என்கிற வம்புத்தம்பி தன் தலமறைவு வாழ்க்கையை எப்போதுதான் முடிவுக்குக் கொண்டுவருவாரோ தெரியவில்லை. இன்று அவர் தனது பிறந்தநாளக்கூட மிக ரகஸியமாக வீட்டுக்குள் கொண்டாடிவிட்டு மீண்டும் தலைமறைவாகிவிட்டார்.

பீப் சாங் என்ற பெயரில் ஆபாசப்பாடலை உருவாக்கியதற்காக நடிகர் சிம்பு மீது தமிழகம் முழுக்க பல்வேலறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

இன்னொரு பக்கம், காவல்நிலையங்களிலும் அவர் மீது புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பீப் சாங் விவகாரத்தில் காவல்துறையின் நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாகவே இருந்து வருகிறார் சிம்பு.

இன்னொரு பக்கம் கைது நடவடிக்கையிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள நீதிமன்றத்திலும் வழக்குமேல் வழக்கு தொடுத்து நீதிமன்றத்தையே கேவலப்படுத்தி வருகிறார்.

போலீஸ் மற்றும் நீதிமன்றத்தின் நடவடிக்கையைக் குலைக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் சிம்பு நீதிமன்றம் கொடுத்த கெடுவின்படி கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருக்க வேண்டும்.

அங்கு ஆஜராகாதது மட்டுமில்லை, தான் ஆஜராக மேலும் கெடுவிதிக்கும்படி புதிய வழக்கும் தொடுத்துள்ளார்.

எத்தனை வழக்கு தொடுத்தாலும் எந்த நேரத்திலும் காவல்துறை தன் கையில் கைவிலங்கு மாட்ட வாய்ப்புள்ளது என்ற பயமும் சிம்புவுக்கு உள்ளது.

இன்று சிம்புவுக்கு பிறந்தநாள்.

இன்றைய தினம் சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தின் இசைவெளியீட்டை பிரம்மாண்ட விழாவாக நடத்த திட்டமிட்டிருந்தார் டி.ராஜேந்தர்

இன்றைக்கு பிரஸ்மீட் நடத்தவும் ஏற்பாடுகள் செய்திருந்தார்.

இதுவரை தலைமறைவாக இருந்துவரும் சிம்பு இன்றைய தினம் நிச்சயம் வெளியே தலைகாட்டித்தான் ஆக வேண்டும்.

எனவே காவல்துறை சிம்புவை கைது செய்ய காத்திருக்கிறது என்று ரகசிய தகவல் சிம்புவின் குடும்பத்தினருக்கு தெரிய வந்ததாம்.

எனவே இது நம்ம ஆளு இசைவெளியீட்டு விழாவை ரத்து செய்ததோடு, போலீஸுக்கு பயந்து வீட்டுக்குள்ளேயே சிம்புவின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளனர்.

இதில் சிம்புவின் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்ததும் தனது நண்பர்களுடன் ஈ.சி.ஆர் பங்களாவுக்கு பறந்துவிட்டார்சிம்பு.

ம்ம்ம்ம்…இன்னும் எத்தனை நாளைக்கு இந்த நாடகம் பார்ப்போம்.

 

Related Images: