ஜெயம் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டி.ரவிகுமார் தயாரிக்கும் படம் ‘நட்பதிகாரம் – 79’.  இந்த படத்தில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நடித்த ராஜ்பரத் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு  கதாநாயகனாக ‘வல்லினம்’ படத்தில் நடித்த அம்ஜத்கான் நடிக்கிறார். கதாநாயகிகளாக ரேஷ்மி, தேஜஸ்வி நடிக்கிறார்கள். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், பஞ்சு சுப்பு, வினோதினி மற்றும் பலர் நடிக்கிறார்கள். ‘கலக்கப்போவது யாரு’ விக்னேஷ் கார்த்திக் காமெடியனாக அறிமுகம் ஆகிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ரவிச்சந்திரன். படம் பற்றி இயக்குனர் ரவிச்சந்திரன் கூறுகையில், “கண்ணெதிரே தோன்றினாள்’, ‘மஜ்னு’, ‘சந்தித்த வேளை’, ‘உற்சாகம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து நான் இயக்கும் ஐந்தாவது படம் இது.   ‘கண்ணெதிரே தோன்றினாள்’ நட்பையும் காதலையும் சொன்ன விதத்தில் அப்படம் பெரிய வெற்றி அடைந்தது. அதேபோல் ‘நட்பதிகாரம் -79’ படத்தில் நட்பு, காதல், குடும்ப உறவுகள் பற்றி வேறொரு   பரிமாணத்தில் சொல்லியிருக்கிறேன். படத்தில் கிளாமரான சில விசயங்கள் இருக்கிறது என்றாலும், கதை அம்சத்துக்காக  படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் அடுத்த மாதம் உலகம் முழுவதும் வெளியாகிறது” என்றார்.

Related Images: