செய்யாத குற்றத்திற்காக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிவரும் பேரறிவாளனை சந்தித்து தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் நலம் விசாரித்தனர்.

நேற்று மதியம் திரைப்பட இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், கரு.பழனியப்பன், அமீர் ஆகியோர் வேலூர் மத்திய சிறைக்கு வந்து பேரறிவாளனை சந்தித்தனர். சிறையில் 30 நிமிடம் அவர்கள் பேரறிவாளனுடன் உரையாடினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், பேரறிவாளனை சந்தித்து நலம் விசாரிக்க வேண்டும் என்பதற்காக வந்தோம் என தெரிவித்தனர்.
தன்னை விடுதலை செய்ய வேண்டும் என பேரறிவாளன் நீதிமன்றம் வாயிலாக போராடி வரும் நிலையில் கடந்த வாரம் உடல்நிலை சரியில்லாத தனது தந்தை குயில்தாசனை சந்திக்க பரோல் வழங்க வேண்டும் என மனுதாக்கல் செய்துள்ளார்.

Related Images: