தேசிய விருது பெற்ற எடிட்டர் கிஷோரின் தந்தையின் அழுகைக்குரல்தான் இப்போதைக்கு கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக். 73 வயதான கிஷோரின் தந்தை தன் மகன் சினிமாவில் பணியாற்றியதாலேயே தாங்கள் வறுமையில் சிக்கித்தவிப்பதாகவும், சினிமா ஆசையாலேயே கிஷோர் திருமணம் கூட செய்துகொள்ளாமல் இளம் வயதில் மரணத்தைத் தழுவியதாகவும் புலம்பித்தள்ளியிருக்கிறார்.

அவரது பரபரப்பான பேட்டிக்கு மத்தியில் பிரபலமான தயாரிப்பாளரும், நடிகருமான ஒருவர் மூன்றரை லட்ச ரூபாய் சம்பள பாக்கியை செட்டில் செய்யாமல் ஏமாற்றி விட்டதாகவும், வறுமையில் வாடும் தங்களுக்கு அந்தப்பணத்தை செட்டில் பண்ணி உதவலாமே என்றும் ஆதங்கப்பட்டிருக்கிறார்.

இணையங்களில் இச்செய்தி வேகமாகப் பரவவே ‘அந்த நபர் தனுஷ்தான் என்றும் சம்பள பாக்கி விசாரணை’ படத்துக்கானது என்றும் பெரும்பாலானோர் பீதி கிளப்புகிறார்கள்.

இவர்களது ஏளனங்களில் இருந்து எஸ்கேப் ஆவதற்காவது, அநேகமாக கிஷோரின் தந்தைக்கு விரைவில் பணம் கிடைக்கும் என்று நம்புவோம்.

Related Images: