சின்னத்திரை நட்சத்திரம் சாய் பிரசாந்தின் தற்கொலைச் செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீடியா மீள்வதற்குள் இன்னொரு சின்னத்திரை நிகழ்ச்சித்தொகுப்பாளினி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.
23 வயதான கே,நிரோஷா செகண்ட்ராபாத்தைச் சேர்ந்தவர். பிரபல ஜெமினி தொலைக்காட்சியில் இசை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார். கனடாவில் வசிக்கும் இளைஞர் ஒருவரை நிரோஷா தீவிரமாகக் காதலித்ததாகவும், அக்காதலில் ஏற்பட்ட பிரச்சினையால்தான் அவர் தற்கொலை முடிவுக்கு போயிருக்கமுடியும் என்றும் இப்போதைக்கு போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
முன்னதாக இன்று அதிகாலை அவர் தங்கியிருந்த ஹாஸ்டல் அறையில் அவரது சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது.
மூன்று தினங்கள் கூட முடிவடையாத நிலையில் இன்னொரு சின்னத்திரை நட்சத்திரத்தின் தற்கொலை இண்டஸ்ட்ரியைச் சேர்ந்தவர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.