வேல.ராமமூர்த்தியன் குற்றப் பரம்பரை நாவலை பாலா அடுத்து எடுக்க இருப்பதாகக் கிளம்பியிருக்கிறார். தேவர் சாதியினரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாவல் என்பதால் பாலாவும் அதில் மிக ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது. அதே காரணத்துக்காகவே பாரதிராஜாவும் முன்பிருந்து இந்நாவலைப் படமாக்குவதில் அக்கறை காட்டி வந்திருக்கிறார்.

இப்போது பாலாவே இந்தப்படத்தை எடுக்கப்போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதற்கான முன் வேலைகள் ஆரம்பம் ஆகிவிட்டன. இது சாதியக் கதை என்பதால், அதே சாதியை சேர்ந்த பல விஐபிகள் சம்பந்தப்பட்ட இருவரையும் சந்தித்து வருகிறார்களாம். சிலர் இந்த படத்தை பாரதிராஜா இயக்கட்டும். அதுதான் சரியாக இருக்கும் என்றும், சிலர் பாலாவே இயக்கட்டும், அதுதான் நல்லது என்றும் கூறி வருகிறார்களாம்.

ஆனால் குற்றப்பரம்பரை கதையை திரை வடிவமாக்கிக் கொண்டிருக்கும் எழுத்தளார் வேல.ராமமூர்த்தி, பாலாவின் பக்கத்தில் நிற்கிறார். அதுமட்டுமல்ல, குற்றப்பரம்பரை கதையை எழுதியவரும் இவர்தான். இந்த சர்ச்சை குறித்து பிரபல வார இதழான குமுதம் வேல.ராமமூர்த்தியிடம் கருத்துக் கேட்டபோது  “நான் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறேன். குற்றப்பரம்பரை ஸ்கிரிப்ட் தயாராகிடுச்சு. பாலா இயக்குகிறார். ஹீரோ எல்லாமே செலக்ட் ஆயாச்சு. பாரதிராஜா தேவையில்லாமல் பேசுகிறார். அவர் வேலையத்தவர். சும்மா இருக்கிறார். எனக்கு ஆயிரம் வேலை இருக்கு. நம்ம செல்லமா வீட்டுல வளர்க்கிற நாலு மாத நாய்க்குட்டிக்கு கூட தெரியும். குற்றப்பரம்பரை வேல.ராமமூர்த்தியோட கதைன்னு. 80 வயசான பாரதிராஜாவுக்கு தெரியாதா என்ன? கூடிய சீக்கிரம் படம் வேலை ஆரம்பிக்கப் போவுது” என்று கூறியிருக்கிறார் அவர்.

வேல.ராமமூர்த்தி ஐயா அவர்களே, ‘இக்கதையை படமாக்க நான் பாலாவிற்குத் தான் பேசியிருக்கிறேன். பாராதிராஜாவை அல்ல’ என்று சிம்பிளாக முடித்துவிட்டுப் போவதை விட்டுவிட்டு வேலையத்த வெட்டிப் பேச்சு எதுக்குங்க?

Related Images: