வளர்ந்து வரும் நேரத்தில் கதை கேட்க அஞ்சுவது, உதவி இயக்குநர்களை உதாசீனம் செய்வது, அடுத்த அஜித்,விஜய் ரெண்டுமே நான் தான் என்று அலட்டிக்கொள்வது போன்ற காரணங்களால் உருப்படியான படங்கள் கிடைக்காமல் கோடம்பாக்கத்தில் ‘கத்துக்குட்டியாக’  உலாவிக்கொண்டிருந்தவர் ‘சித்திரம் பேசுதடி’ நரேன்.

இதே சமாச்சாரத்தையே, கூடுதல் சிரமம் எடுத்துக்கொண்டு தேடுதலில் ஈடுபட்டதால் படங்கள் அமைவதில் தாமதம் என்று அவர் சப்பைக் கட்டு கட்டிக்கொண்டு திரிவது ஒரு சோகக்கதை.

இந்நிலையில் காமெடியன் விவேக் மற்றும் மலையாள மைனா மியா ஜார்ஜ், ஆந்திர ஆவக்காய் சஞ்சிதா ஷெட்டி ஆகிய ஷைடிஷ்களுடன் நரேன் கைகோர்க்கும் ‘ரம்’ என்ற காமெடி த்ரில்லர் முடிவடையும் தறுவாயில் உள்ளது.

இது குறித்து நரேன் கூறுகையில், ‘’இதுவே நான் நடிக்கும் முதல் HORROR படம் என்பதால் பெரும் மகிழ்ச்சியுடன் இந்த படத்தில் நடித்தேன். ‘ரம்’மின் மிகப்பெரிய பலம் விவேக் சார்.அவருடன் நான் நடிப்பதில் மிக்க மகழ்ச்சி அடைவதோடு பெருமையும் அடைகிறேன். இந்த படம் நிச்சயம் ரசிகர்களை திகில் பயத்தில் உறைய வைக்கும். அதற்கு உறுதி நிச்சயம். புதிய அனுபவத்தை இந்த படம் ரசிகர்களுக்கு வாரி வழங்கும், என்றார்.

இந்த ’ரம்மை’ ’மசாலா படம்’ படத்தை தயாரித்த ஆல் வின் pictures தயாரிக்க , சாய் பாரத் இயக்குகிறார். இனியாவது நரேனுக்கு நல்ல நே’ரம்’ அமைகிறதா பார்ப்போம்.

Related Images: