தமிழில் பேய்ப் படங்கள் சில கலெக்ஷனை அள்ளியதைத் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட பேய் படங்கள் தற்போது தயாரிப்பில் இருக்கின்றன. கூடிய விரைவில் தமிழ்நாட்டில் எல்லோரும் ஸோம்பிகள் போல் நடமாடாத குறையாகிவிடும் போலிருக்கிறது.

நயன்தாராவின் மார்க்கெட் நல்ல நிலையில் இருப்பதோடு அவர் நடித்த மாயா பேய் படம் கடந்த வருடம் வெளியாகி வசூலில் சாதனை நிகழ்த்தியது. இதில் பேய் வேடத்தில் நயன்தாரா மிரட்டி இருந்தார்.

தெலுங்கு இயக்குனர் ஒருவர் சமீபத்தில் திகில் படம் ஒன்றில் நடிக்க நயன்தாராவை அணுகினார்.  அதில் நடிப்பதற்கு நயன்தாரா ரூ.4 கோடி கேட்டதாக கூறப்படுகிறது. பேயைக் கண்டது போல அலறியடித்து ஓடிய புரொட்யூஸர்  அவரை ஒதுக்கி விட்டு வேறு நடிகையை தேடினார்..

பேய்கள் வரிசையில் மாயாவுக்கு அடுத்து அஞ்சலி சுமாரான பேயாட்டம் போடுபவராக இருப்பதால் தற்போது  நயன்தாராவுக்கு பதில் அஞ்சலியை புக் செய்துவிட்டார்களாம். அஞ்சலியின் சம்பளமும் ரூ.1 கோடிக்கு குறைவு தானாம். எனவே புதிய மாயாவாக அஞ்சலியை புக் செய்து வருகிறார்களாம்.

என்ன பண்றது ? புரொட்யூஸர்களையெல்லாம் இப்போ இசக்கியம்மன் பிடிச்சு ஆட்டுது.

 

Related Images: