ஜெமினி டி.வி நிகழ்ச்சி தொகுப்பாளினி நிரோஷாவின் தற்கொலை குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது போலிஸாருக்குக் கிடைத்துள்ளன.

நிரோஷா பொதுவாக செல்ஃபிக்கள் எடுப்பதில் மிகுந்த ஆர்வமுள்ளவராம். மிகவும் கலகலப்பான, எப்போதும் அரட்டை அடித்துக்கொண்டே இருக்கக்கூடிய ஜாலியான பெண். அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பதை நம்பமுடியவில்லை’ என்று அவரது தோழிகள் கூறுகின்றனர்.

ஆனால் நேற்று நள்ளிரவு கனடாவில் இருக்கும் தனது காதலன் ரித்விக்குடன்  ஸ்கைப் மூலம் கடும் வாக்குவாதத்தில் இருந்த நிரோஷா ஒரு கட்டத்தில் தனது துப்பட்டாவால் தூக்குப் போடப்போவதாக மிரட்டியிருக்கிறார். நிரோஷா மிகவும் சீரியசாகவே தன்னை மிரட்டுவதை உணர்ந்த ரித்விக், இன்னொரு முனையில் செகந்தராபாத்தில் இருந்த நிரோஷாவின் உறவினர்களுக்கு தகவலைச் சொல்ல, அவர்கள் போலீசை அணுக, போலிஸ் நிரோஷாவின் அறைக்குள் நள்ளிரவில் நுழைந்தபோது எல்லாம் முடிந்திருந்தது.

நிரோஷாவின் செல்போனையும், ஸ்கைப் வீடியோ பதிவையும் கைப்பற்றிய போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொழில்நுட்பம் எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை நினைத்து நொந்துகொள்வதைத் தவிர வேறு வழி?

Related Images: