ட்விட்டர் மூலம் செய்தி சொல்லும் சூழல் வந்தாலும் வந்தது.  சிங்கிள்ஸ் வெளியிடுவது தொடங்கி, இன்னைக்கு நடுராத்திரி பனிரெண்டு மணிக்கு நான் தூக்குல தொங்கப்போறேன் என்பது வரைக்கும் சகலத்தையும் சொல்லிவிட்டே செய்யும் நிலைக்கு வந்துவிட்டார்கள் சினிமாக்காரர்கள்.

வசூல் நிலவரம் சற்று கலவரமாகவே இருந்தாலும் விமர்சகர்களால் வெகுவாக சிலாகிக்கப்பட்ட படம் ராஜூ முருகன் இயக்கியிருந்த ‘குக்கூ’. அப்படத்திற்குப் பின்னர் முற்றிலும் புதுமுகங்களை வைத்து ராஜுமுருகன் இயக்கிவந்த படம் முற்றுப்பெறாத நிலையில்,இன்று மாலை ஐந்து மணிக்கு தனது அடுத்த படத்தின் டைட்டில், நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்களை அறிவிக்கவிருப்பதாக சற்றும் பரபரப்பற்ற செய்திகள் இணையங்களில் நடமாடி வருகின்றன.

பொதுவாக விஷேசமான செய்திகளை சனிக்கிழமை சாயுங்காலம் ஐந்து மணிக்கு அறிவிப்பார்கள். ராஜுமுருகன் புதன்கிழமையைத் தேர்ந்தெடுத்ததற்கு ஒரு விபரீதமான காரணம் இருக்கிறது. ஆனால் அதை பொதுவெளியில் சொல்லமுடியாத சூழல். மன்னிக்க..

Related Images: