நடிகர் சங்க நிர்வாகிகள் யாரும் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத விதத்தில் ‘மானஸ்தன்’ சரத்குமார் அம்மாவுடன் மீண்டும் ஐக்கியமானதைத்தொடர்ந்து அதிர்ச்சியில் ஆடிப்போயுள்ளனர்.

இனி சரத்திடம் கணக்கு கேட்கமுடியாது என்பது மட்டுமின்றி அவரைப்பற்றி மூச் விட முடியாது என்பதால், மக்களின் கவனத்தை திசை திருப்ப, நடிகர் சங்கத்தில் பிளவா? பொன்வண்ணன் ராஜினாமா? ரித்திஷ் வருத்தத்தில் இருக்கிறாரா போன்ற சைல்டிஷ் செய்திகளை விஷால் அணியினரே வெக்கமின்றி பரப்பி, அதற்கு அவர்களே மறுப்பும் அளித்து வருகின்றனர்.

நடிகர் நாசர் தலைமையிலான நிர்வாகத்தின் நடிகர் சங்கப் பொதுக்குழு கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சங்கத்துக்குப் புதிய கட்டடம் கட்டுவது தொடர்பாக சங்க உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டது.அத்தோடு சபை சைலண்டாக கலைந்தது.

நாசர்,விஷால், பொன்வண்ணன், கார்த்தி ஆகியோர் மற்ற நிர்வாகிகளிடம் ‘இனி சரத் விவகாரம் குறித்து யாரும் வாயை மூடிக்கூட பேசக்கூடாது’ என்று கிசுகிசுத்து அனுப்பிவைத்தார்களாம்.

Related Images: