நாகார்ஜுனா மாற்றுத்திறனாளியாக நடிக்க, கார்த்தி,தமன்னா ஜோடி சேர்ந்த ‘தோழா’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்தது. இப்படத்திற்கு மலையாள உலகின் பிரபலம் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

பாடல்கள் பற்றி அவ்வளவு சிறப்பான செய்திகள் எதுவும் இல்லை எனும் நிலையில் தனக்கு மிகவும் நெருங்கிய வட்டாரத்தில் பட நாயகன் கார்த்தியைப்பற்றி மிகவும் கடுப்பாக புலம்பித் தள்ள ஆரம்பித்திருக்கிறார் கோபி சுந்தர்.

சங்கீதம் குறித்த எந்த ஞானமும் இல்லாத நிலையில் கொஞ்சமும் இங்கிதம் இல்லாமல் டியூன் போடும் சமயம் தொடங்கி ரெகார்டிங் சமயங்கள் வரை சதா கருத்துக்கள் சொல்லிக்கொண்டே இருந்தாராம் கார்த்தி.

‘மத்ததையெல்லாம் கூட பொறுத்தக்கலாம், ஆனா அந்த தகர டப்பா வாயால பாடிக் காட்டுவான் பாருங்க. அப்ப அப்பிடியே குரவளையக் கடிச்சிரலாம் போல வெறியா இருக்கும்’ என்று வெதும்புகிறாராம் கோப சுந்தர்.

ஸோ ‘தோழா’ பாட்டுக்கள் பாழாப்போனதுக்குக் காரணம் கார்த்திதானா?

Related Images: