இது நடிக நடிகைகளுக்குப் போதாத காலம் போலத் தெரிகிறது. சமீபத்தில் தான் தமிழ்நாட்டில் டி.வி. நடிகர் சாய் பிரசாத் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பு ஒரு டி.வி. நடிகை. போன வாரம் தன் தற்கொலையை தானே ஸ்கைப்பில் லைவ் செய்த நடிகை என்று ஒரே தற்கொலை மயம் தான்.

இந்த வியாதி இப்போது பாலிவுட்டில் தொற்றிக் கொண்டு விட்டது போலும். இந்தி நடிகை பிரதியுஷா வெள்ளியன்று மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலைக்கான காரணம் இன்னும் தெளிவாகவில்லை. அவரும் அவருடைய ஆண் நண்பர் ராகுல் ராஜ் சிங்குக்கும் இடையே பிரச்சனை எனவும், அதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் இப்படி செய்திருக்கிறார் என்றும் கூறுகின்றனர். ராகுலும் பிரதியுஷாவும் திருமணம் செய்ய இருந்தார்கள் என்ற தகவல் வெளிவந்த நிலையில் இவ்வாறு நிகழ்ந்திருக்கிறது.

வட இந்திய டி.வியில் வந்த பிக்பாஸ் என்கிற தொடரின் மூலம் தான் பிரதியுஷா பிரபலமானார். மேலும் பல தொடர்களில் நடித்துள்ளார். அவருக்கு வயது 24. டிப்ரஷன் எனப்படும் மன அழுத்தம் தான் அவர் இப்படி முடிவு தேடக் காரணமாம்.

மன அழுத்தம் வராம பார்த்துக்கங்க பிரதர்ஸ் அன்ட் சிஸ்டர்ஸ். அப்படியும் மீறி வந்தா நிறைய பேர் கூட சேர்ந்தே இருங்க. ஜாலியா இருங்க. டிப்ரஷன் போற வரைக்கும் ஜாலியா சரக்கடிச்சுட்டு இருங்க. தனியா மட்டும் போய் உக்காந்துடாதீங்க. அவ்ளவுதான். ப்ளீஸ். உயிர் டிப்ரஷனை விட மேலானது.

Related Images: