இந்த முறை தேர்தல் சினிமாவில் நட்சத்திரங்கள் புதிதாக எதுவும் இதுவரை ஜொலிக்கவில்லை. அரசியல்வாதிகள் தேர்தல் சூடு முடிந்தவுடன் தங்களைக் கண்டுகொள்வதேயில்லை என்பதால் சினிமா நட்சத்திரங்கள் உஷாராகிவிட்டார்கள். மக்களும் தேர்தலில் ஓட்டெல்லாம் போடும் அளவுக்கு சினிமா நட்சத்திரங்களை நம்புவதில்லை.

டல்லடிக்கும் அம்மாவின் தேர்தல் பிரச்சாரத்தில், ஏற்கனவே வெயில் தாங்காமல் கூட்டத்திற்கு இரண்டு என்று  களப்பலிகள் தொடர்ந்து நடந்து, அவர் ஆணவக்காரி என்ற நற்பெயரை மீண்டும் பெற்றுத் தர ஆரம்பிக்கும் இவ்வேளையில் தான் இந்தத் திருப்பம்.

திருச்சியில் நடக்கவிருக்கும்  அடுத்த சமாதிக் கூட்டத்திற்கு ஸாரி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு அம்மா வருகை தரவிருக்கையில் அங்கே நமீதா அதிமுக., கட்சியில் தன்னை இணைக்க இருக்கிறார். இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவிற்கு முறைப்படி கடிதமும் எழுதியுள்ளார். அதில் தங்களது(முதல்வர் ஜெயலலிதா) தலைமையில் நானும் என்னை இணைந்து கொண்டு எனது பங்களிப்பை தர விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

எனவே இன்று திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில் நமீதாவின் மச்சான்ஸ் எல்லாரையும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

Related Images: