தஞ்சையை சேர்ந்த ஒரு இளம் இயக்குனர். பெயர் அன்பு ராஜசேகர். இவர் எழுதி இயக்கிய ‘தாகபூமி’ என்ற குறும்படத்தை 2012ல் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கையால் வெளியிட்டிருக்கிறார். அந்தப் படம் மாநில அளவில் சிறந்த குறும்படமாக விருதுகள் பெற்றிருக்கிறது. சரி அதனால என்ன  என்கிறீர்களா ? அந்த குறும்படத்தைதான் ‘கத்தி’ என்ற பெயரில் படமாக ‘அடித்து’விட்டார் ஏ.ஆர்.முருகதாஸ் என்று குற்றம் சாட்டி வருகிறார் அன்பு ராஜசேகர். கத்தி வெளிவருவதற்கு முன்பே இவரும் ஊரிலிருந்து கிளம்பி வந்து பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தியும் ஒரு பிரயோஜனமும் இல்லை.

பின்னர் அன்பு ராஜசேகர் கோர்ட்டில் வழக்கு போட்டு பின் முருகதாஸின் பல திரைமறைவு வேலைகளினால் வழக்கை வாபஸ் பெற்றார்  முருகதாஸ் இறுதியில் படத்தை வெளியிட்டு  தன் கல்லாவையும் நிரப்பி விட்டார். இருந்தாலும் தன் போராட்டத்திலிருந்து சற்றும் மனம் தளராத அன்பு ராஜசேகர், 7/4/2016 ம் நாள் தஞ்சையில் ஒரு  உண்ணவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அங்கு வைக்கப்படும் கோரிக்கை என்ன தெரியுமா? இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்க என்பதுதான்.

இந்த உண்ணாரவிரத போராட்டத்தில் தஞ்சை விவசாய சங்கத்தை சேர்ந்தவர்களும், பிரபல அரசியல் கட்சி பிரமுகர்களும் கூட கலந்து கொள்ளப் போகிறார்கள். தனிக்குரல் இப்போது கூட்டுக்குரலாக ஒலிக்கவிருக்கிறது. என்ன செய்யப் போகிறாரோ ஏ.ஆர்.முருகதாஸ்?

சுமார் 50 கோடிக்கும் மேல் கத்தி படத்தின் அனைத்து மொழிகளுக்குமான வெளியீடுகளில் சம்பாதித்த முருகதாஸ் சரியோ தவறோ அன்புவுக்கு ஒரு சிறு தொகையை நட்ட ஈடாகத் தந்து திரைமறைவில் டீஸன்ட்டாக முடித்திருக்கலாம். ஆனால் என்ன காரணமோ இப்படி தில் காட்டுகிறார். ஏன் ஸார் ?

 

Related Images: