சிம்பு-அனிருத் சம்பந்தப்பட்ட பீப் பாடல் வெளியானபோது, ஒரு பாடலாசிரியர் என்ற முறையில் கங்கை அமரனிடம் மீடியாக்கள் கருத்து கேட்டன. அதற்கு “இதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்? அனிருத்தின் உறவினர் ரஜினி, சிம்புவின் தந்தை டி.ஆரிடம் போய் கேளுங்கள்” என்று கோபமாகச் சொன்னார்.

சமீபத்தில் ஒரு விழாவில் பேசியபோது தன் அண்ணன் இளையராஜாவை வம்பிக்கிழுத்திருக்கிறார் கங்கை அமரன். விழாவில் பேசிய அவர் “இந்தப் படத்தின் தயாரிப்பாளர் முன்பு கனடாவில் நான் கச்சேரிகள் நடத்த உதவி செய்தார். அப்போது எனது அண்ணனான இளையராஜாவை கச்சேரி நடத்த அழைப்பேன். அதற்கு போடா வேலை வெட்டி இல்லாதவன்தான் கச்சேரி நடத்துவான் என்று சொல்லி மறுத்து விடுவார். ஆனால் அப்படி சொன்ன இளையராஜாவே இப்போது வெளிநாடு களில் கச்சேரி நடத்துகிறார்’ என மறைமுகமாக இளையராஜாவை தாக்கிப் பேசினார்.

சமீபத்தில் தான் பா.ஜ.கட்சியில் தன்னை சேர்த்துக் கொண்டார் கங்கை அமரன். பாரதிய ஜனதாவில் யார் சேர்ந்தாலும் அவர்களுக்கு அடுத்தவர்களை சீண்டி வம்பிழுக்கும் குணம் தொற்றிக் கொள்ளும் போலும்.

Related Images: