ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்த திகில் கதாசிரியரான ராஜேஷ் குமாரின் நாவலை தழுவி உருவாகி இருக்கும் இந்த மெடிக்கோ – கிரைம் – திரில்லர் திரைப்படத்தின் தெலுங்கு டப்பிங் படம் தான் ‘குற்றம் 23’,   ‘என்னை அறிந்தால்’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘என்த வாடு காணி’ திரைப்படம் மூலமாகவும், அல்லு அர்ஜுனின் ‘புரூஸ் லீ’  திரைப்படம் மூலமாகவும் சிறந்ததொரு அதிரடி நடிகராக தெலுங்கில் ஒரு நடிகராக உருவாகி வருகிறார் அருண் விஜய்.
“தெலுங்கு சினிமாவின் வர்த்தக உலகினரின்  எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கும்  என்பதை நான் நன்கு அறிவேன். நிச்சயமாக தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் குற்றம் 23 திரைப்படம்  நல்ல வரவேற்பை  பெறும் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கின்றது. எங்கள் படத்தின் டப்பிங் வேலைகளை நாங்கள் தற்போது புகழ் பெற்ற தெலுங்கு திரைப்பட வசனகர்த்தா  திரு ராமகிருஷ்ணனோடு இணைந்து தொடங்கி இருக்கிறோம்.
மணி ரத்னம் சார் மற்றும் ஷங்கர் சாரின் திரைப்படங்களுக்காக வசனகர்த்தாவாக பணியாற்றும் திரு ராமகிருஷ்ணன் தான் குற்றம் 23 படத்தின் தெலுங்கு பதிப்பிற்காக பொறுப்பேற்று இருக்கிறார். தெலுங்கு படத்தின் தலைப்பை இன்னும் ஒரு வாரத்தில் முடிவு செய்துவிடுவோம். ஒரே சமயத்தில் தமிழிலும், தெலுங்கிலும், மிக பிரம்மாண்டமான முறையில் எங்கள் குற்றம் 23 படத்தை வெளியிட நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்…” என்று நம்பிக்கையுடன் கூறினார்  குற்றம் 23 படத்தின் கதாநாயகன் அருண் விஜய்.

Related Images: