தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமாகும் அனைவருக்கும் ஒரு தீராத ஆசை இருக்கும், அது இசைஞானிஇளையராஜாவின் இசையில் ஒரு பாடலையாவது பாடிவிட வேண்டும் என்பதே.

தனது இனிமையான குரலால் அனைவரையும் வசிகரித்த இளம் பாடகி பிரியங்காவிற்க்கும் இந்தக் கனவு பலநாட்களாக இருந்துவந்தது.

தற்போது இவரது பல நாள் கனவு நினைவாகியுள்ளது, இசைஞானி இளையராஜாவின் இசையில் இயக்குநர்பாலா இயக்கத்தில் Dr.தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய வரிகளில் உருவான “நாச்சியார்” படத்தில் இடம்பெறும் பாடலில் நடிகர் ஜீ.வி.பிரகாஷ் குமாருடன் இணைந்து பாடியுள்ளார்.

பிரயங்காவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியதால் மிகுந்த சந்தோஷத்தோடு உள்ளார்.

Related Images: