தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சினிமா பிஆர்ஓ தொழில் தொடங்கி 60 ஆண்டுகள் ஆகும் இனிய வரலாற்று நிகழ்வு, யூனியன் பதிவு செய்து 25 ஆண்டுகள் ஆகும் வெள்ளி விழா என முப்பெரும் விழாவை கொண்டாட உள்ளனர்.
விழா ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசனைக் கூட்டம் 10.12.2017 அன்று மாலை 3 மணிக்கு நுங்கம்பாக்கம் லே மேஜிக் லேன்டர்ன் திரையரங்கில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 5 மணிக்கு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நிர்வாகிகள் வெளியிட்ட அறிக்கையில், தமிழ் சினிமாவில் 1958ஆம் ஆண்டு நாடோடி மன்னன் திரைப்படத்தின் மூலம் மக்கள் திலகம் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள், திரு.பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களை “மக்கள் தொடர்பாளராக” நியமித்து திரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
அதன் பின்னர் டாக்டர் கலைஞர் முதல்வரான பின் எங்கள் பிதாமகன் பிலிம்நியூஸ்ஆனந்தன் அவர்களுக்கு “கலைமாமணி” விருது வழங்கி கௌரவப்படுத்தினார்.
அதன்பிறகு முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் பிலிம்நியூஸ்ஆனந்தன் அவர்களின் திரையுலகின் சேகரிப்பான தகவல் மற்றும் புகைப்படங்களுக்கு நிதி கொடுத்து வாழ்த்தினார்.
ஆகவே, எங்கள் யூனியன் சார்பில் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவும், 1958 ல் மக்கள் தொடர்பாளர் என்ற தொழில் துவங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டியும், தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் 1993 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 25 ஆண்டு வெள்ளி விழாவையும் சேர்த்து முப்பெரும் விழாவாக கொண்டாட உள்ளோம். விழாவில் எம்.ஜி.ஆர் அவர்களின் படங்களில் பணியாற்றிய நடிகர், நடிகையர் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவப்படுத்த உள்ளோம்.
யூனியன் சார்பில் மலர் ஒன்றையும் வெளியிட உள்ளோம்.
இசையமைப்பாளர் இன்னிசை வேந்தர் டாக்டர் (சங்கர்) கணேஷின் திரைப்பட இன்னிசை நிகழ்ச்சியும், நடன இயக்குனர் கலா மாஸ்டர் குழுவினரின் நடன நிகழ்ச்சியும் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர் பாடல்கள் மட்டும் இடம் பெறுகிறது.
தமிழக கவர்னர், தமிழக முதல்வர், தமிழக துணை முதல்வர், தமிழக செய்தித்துறை அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கும் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, கில்டு, டிஜிட்டல் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், திரைப்பட இயக்குனர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள்சங்கம் ஆகிய அமைப்புகளுக்கும் கடிதம் கொடுத்துள்ளோம்.
வரும் ஜனவரி மாதம் ( 2018 ) 3ஆம் தேதி கலைவாணர் அரங்கத்தில் இந்த முப்பெரும் விழா முழுக்க முழுக்க திரைத்துறை சம்பந்தப்பட்ட விழாவாக நடத்த திட்டமிட்டு செயலாற்றி வருகிறோம்.
என பெருமிதத்துடன் கூறியுள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் பெருதுளசி பழனிவேல், பொருளாளர் விஜயமுரளி, துணைத்தலைவர்கள் V.K.சுந்தர் மற்றும் P.T.செல்வகுமார், இணைச்செயலாளர் நிகில் முருகன் மற்றும் யுவராஜ், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ரியாஸ், சிங்காரவேலு, மௌனம் ரவி, ஜான்சன், துரைபாண்டி, கோவிந்தராஜி, சரவணன், கிளாமர் சத்யா, விஜி முருகன், நித்தீஷ், சூர்யா சார்லஸ், ராஜேஷ், செல்வகுமார், செல்வரகு, மதுரை செல்வம், திரை நீதிசெல்வம், பாசென், கடையம் ராஜீ, ராமானுஜம், மேஜர்தாசன், சாவித்திரி, வின்சென்ட், மனோகரன், ஆனந்த், நெல்லை சுந்தர்ராஜன், சந்துரு, குமரேசன், வெங்கட், சக்தி சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Images: