‘அதிபர்’ படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரித்திருக்கும் படம் ‘பக்கா.’

இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக  நிக்கி கல்ராணி, பிந்து மாதவி இருவரும் நடித்துள்ளனர். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவி மரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோரும் நடித்துள்ளனர். ஒரு முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமாரும் நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு – எஸ்.சரவணன், இசை – C.சத்யா, பாடல்கள் – யுகபாரதி, கபிலன், கலை   இயக்கம் – கதிர், நடனம் – கல்யாண்,  தினேஷ், சண்டை பயிற்சி – மிராக்கிள் மைக்கேல், படத் தொகுப்பு – சசிகுமார், தயாரிப்பு நிர்வாகம் – செந்தில்குமார், இணை தயாரிப்பு – B.சரவணன், தயாரிப்பு -T.சிவகுமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  S.S.சூர்யா.

படம் பற்றி இயக்குநர் எஸ்.எஸ்.சூர்யா பேசும்போது, “இதுவொரு முழு நீள  காமெடி படமாக உருவாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இதுவரை ஒரு காட்சியிலோ அல்லது ஒரு பாடல் காட்சியிலோதான் திருவிழாவை பார்த்திருபோம். ஆனால் நாங்கள் ஒரு திருவிழாவையே படமாக எடுத்திருக்கிறோம். இன்டீரியல்  காட்சிகள் இல்லாமல் படம் முழுக்க எக்ஸ்டீரியல் என்று சொல்லப்படும் வெளிப்புறங்களிலேயே படமாக்கியிருக்கிறோம். 

கள்ளக்குறிச்சி அருகில் உள்ள செம்படாப்குறிச்சி என்ற ஊரில் ஒரிஜினல் திருவிழாவை நடத்தி இசையமைப்பாளர் சத்யாவை அழைத்துச் சென்று இரவு முழுக்க அவரை பார்க்க வைத்து ஒரு கரகாட்டத்துக்கான பாடலை உருவாக்க வைத்தோம். அந்தப் பாடல் பட்டி தொட்டியெங்கும் பேசப்படும் பாடலாக இருக்கப் போகிறது.

குற்றாலம் பக்கத்தில் ஒரு ஆற்றில் 1000 பேரை வைத்து ஆற்று  திருவிழாவில்  ஒரு வித்தியாசமான காட்சிகளை தத்ரூபமாக படமாக்கினோம்.  படம் விரைவில் வெளியாக உள்ளது…” என்றார்.

Related Images: