மணிரத்னம் சளைக்காமல் வரிசையாகத் தோல்விப் படங்கள் பலவற்றைக் கொடுத்தாலும் அவருக்கு Money தர இன்னும் ஆள் இருக்கிறது.
மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது.
“செக்கச்சிவந்த வானம்” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அரவிந்த்சாமி, சிலம்பரசன் (STR), விஜய்சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
வரும் 12ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.
இசை – A.R.ரஹ்மான்
ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன்
படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்
பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து
கலை – ஷர்மிஷ்டா ராய்
உடைகள் வடிவமைப்பு – ஏகா லகானி
சண்டைப்பயிற்சி – திலிப் சுப்பராயன்
ஒலிப்பதிவு – ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி
ஒப்பனை – சிகை அலங்காரம் – செரினா டிக்ஸேரா
ஸ்டில்ஸ் – C.H.பாலு
மக்கள் தொடர்பு – நிகில்
டிசைன்ஸ் – கோபி பிரசன்னா
லைன் புரொட்யுசர் – K.சின்னதுரை
கிரியேடிவ் புரொட்யுசர் – கிரண் & பிஜாய் நம்பியார்
நிர்வாக தயாரிப்பாளர் – சிவா அனந்த்
எழுத்து – மணி ரத்னம் & சிவா அனந்த்
தயாரிப்பு – மணி ரத்னம் & சுபாஸ்கரன்
இயக்கம் – மணி ரத்னம்
எல்லாம் மணிரத்னத்தின் ஆஸ்தான கலைஞர்கள்.  சிம்புவும், விஜய் சேதுபதியும் என்று புதிதாய் கலவை முயற்சிக்கிறார் மணி. கதையில் சிவா ஆனந்த் என்று ஒரு பெயர் வருகிறது. மணிரத்னம் சொந்தமாக கதை இன்னும் எழுத நினைப்பது அவர் தனக்குத்தானே சூன்யம் வைப்பது போல ஆகிவிட்டது அவரது திரைக்கதையின் தன்மைகள். இதில் தேறுவாரா ? பார்ப்போம்.
புரொட்யூஸர் யார் தெரிகிறதா ? ராஜபக்சேவின் பினாமி என்று இருந்து இப்போது அந்த பினாமிப் பணத்தில் தமிழ்த் திரையுலகின் ரஜினி, கமலிலிருந்து எல்லாருக்கும் பணம் கொடுத்து படம் எடுக்கும் லைக்கா புரொடக்ஷன்ஸ் தான்.

Related Images: