இந்தப்படத்தின் இரண்டு நிமிட ட்ரெயிலரும், போஸ்டர் டிசைன்களும், இது என்னவிதமான படம் என்று எந்தவிதமான யூகங்களுக்கும் இடம் அளித்திருக்கவில்லை.
தியேட்டருக்குள் நுழையப்போகுமுன் தயாரிப்பாளர் தரப்பில் தரப்பட்ட ஒரு துண்டு
அறிக்கைதான் ‘பிட்சா’ ஒரு த்ரில்லர் படம் என்பதாகவும், மற்றவர்களும் சுவாரசியமாக பார்க்கவேண்டுமென்பதால், தயவு செய்து கதையில் நடக்கும் திருப்பங்களை வெளியில் சொல்லவோ, எழுதவோ வேண்டாம் என்ற கோரிக்கையுடன் இருந்தது.
’இங்கே சிறுநீர் கழிக்காதே’ன்னு எழுதிவச்சா, அதே இடத்துல அஞ்சி நிமிஷத்துக்கு அசராம பெரும்நீர் கழிக்கிற தமிழ் சமூகமாச்சே, கதையை வெளியே சொல்லாதீங்கன்னு நீங்க கோரிக்கை வச்சா நாங்க கேட்டுருவமா?
இன்னொருபக்கம் விமர்சனம்ங்கிற பேர்ல நாங்க முக்கால்வாசி பக்கத்துல கதையை எழுதிதான காலத்தை ஓட்டிக்கிட்டிருக்கோம். அதுலயே கைவச்சீங்கன்னா?
கல்யாணம் தான் கட்டிக்காம லிவிங் டுகெதராக வாழும் விஜய் சேதுபதியும், ரம்யா நம்பீஷனும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பேய்க்கதை மன்னன் பி.டி.சாமியின் பேத்தியான ரம்யா’ பிட்சா’ என்ற பெயரில் ஒரு மொக்கை திகில் கதை எழுதி வருகிறார். இன்னொரு குட்டித்திகிலாக, காண்டம் கம்பெனியின் உற்பத்திக்குறைபாட்டால், ரம்யாவின் வயிற்றில் ஒரு குழந்தையும் கருவாகி உருவாகிறது.
பிட்சா டெலிவரிபாயாக, போதாத சம்பளத்தில், வேலை பார்க்கும் விஜய் சேதுபதியின் கையில், ஒரு நாள் அவரது முதலாளி சாக்லேட் டப்பாவைக் கொடுத்து, அதை தனது வீட்டில் தந்துவிடச் சொல்ல, சின்ன விபத்தில் சிக்கும் சேதுபதி சட்டையை மாற்றிக்கொள்ள தன் வீடு செல்ல... அங்கே விஜய் சேதுபதியும்,ரம்யா நம்பீஷனும், இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜும் சேர்ந்து நடத்தும், நாடகத்துள் நாடகம் தான் த்ரில்லிங்கான பிட்சா. நல்லா பாத்துக்கங்க நான் கதையை சொல்லலை..
1967-ல் வந்த ‘அதே கண்கள்’-க்கு அப்புறமாய், படத்தின் பல காட்சிகளில் ஜிவ்வென்று மண்டை சூடாகிற அளவுக்கு, இப்படி ஒரு த்ரில்லர் படம் தமிழில் இதுவரை வந்ததில்லை என்றே பயந்தபடி சொல்லலாம்.
விஜய் சேதுபதியும், ரம்யா நம்பீஷனும் அப்படியே அச்சு அசல் காதலர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ஒருவேளை அப்படியே வாழ்ந்து வந்ததால், படத்திலும் அது வந்ததோ? [ஏதோ நம்மளால முடிஞ்ச திகிலு, அவங்களுக்கு மட்டும் ]
ஏற்கனவே சில ஓடாத படங்களில் நடித்ததால் தமிழ்சினிமாவால் கைவிடப்பட்ட ரம்யாவை, இனி ஒரு எழுத்து சேர்த்துப்போட்டு ரம்மிய நம்பீட்சா என்றே கூட அழைக்கலாம் என்கிற அளவுக்கு படம் முழுக்கவே மனசை அள்ளுகிறார்.
சேதுபதியை ஒரு பேய் பங்களாவில் அடைத்துப்போட்டுவிட்டு,நாமளே போய் ரம்யா கூட ரம்மி ஆடிவிடலாமா என்கிற சபலமும் வருவதை தவிர்க்க முடியவில்லை.
பாட்டு மாதிரியே இல்லாத பாட்டுக்கள் போட்டிருக்கும், சந்தோஷ் நாராயணனின் இசையும், மழைக்காட்சிகளில் நம் மீது சாறலை உணரவைக்கும் அமர்நாத்தின் ஒளிப்பதிவும் அபாரம். வெல்கம் பாய்ஸ்.
……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………… டைரக்டர் கார்த்திக் சுப்பாராஜைப் பத்தி, ஒரு பத்துவரி பாராட்டி எழுதுன, கடைசி பாராவை மட்டும் மறுபடியும் மறுபடியும், ஏதோ உருவம், இந்த விமர்சனதுக்குள்ள புகுந்து டெலீட் பண்ணிக்கிட்டிருக்கே.. அய்யோ யாராவது வந்து காப்பாத்துங்க.
Related news items:
Newer news items:
- உதயம்: தேசிய நெடுஞ்சாலையில் நிர்கதியாய் நிற்கும் தமிழ்க்காதல் - Saturday, 04 May 2013
- சேட்டை பத்திரிக்கையாளர்களைப் போட்ட ஆ(ய்)ட்டை - Sunday, 07 April 2013
- 9ல குரு. 18ல சனி. கண்ணா காமெடி படம் பாக்க ஆசையா..? - Thursday, 14 March 2013
- விமர்சனம் ‘ஆதிபகவன்’- மகாத்மா காந்திக்கு ஜே’ - Sunday, 24 February 2013
- விமர்சனம் ‘டேவிட்’- ’ ஏலி ஏலி லாமா சபக்தானி? - Tuesday, 05 February 2013
Older news items:
- விமரிசனம் ‘தாண்டவம்’ – அட யாருங்க இது, பப்ளிக் இடத்துல, கோரஸா கொட்டாவி விடுறது? - Friday, 28 September 2012
- விமரிசனம் ‘சுந்தரபாண்டியன்’- இவன் ஒரு சுப்பிரமணியபுரத்து நாடோடி’ - Saturday, 15 September 2012
- விமர்சனம் ‘நான்’ – டைலாம்மோ டைலாம்மோ டைலா டைலா டைலாம்மோ - Thursday, 16 August 2012
- விமர்சனம் ‘மிரட்டல்’ – ஜனங்களை தியேட்டரை விட்டு விரட்டல் - Friday, 03 August 2012
- விமர்சனம்-’கிருஷ்ணவேணி பஞ்சாலை’ ‘சக்தி மசாலாவுல சம்பாதிச்சி, கிருஷ்ணவேணி கிட்ட பஞ்சராயிட்டாங்க’ - Friday, 08 June 2012




கேப்டன் விசயகாந்த் அவர்களுக்கு தமிழிலேயே பிடிக்காத கெட்டவார்த்தை மாதிரி, எனக்கு தமிழிலேயே பிடித்த, எத்தனை முறை பயன்படுத்தினாலும் அலுத்துப்போகாத..
’எனவே என்னையும் சக பத்திரிகையாளர்களயும் வெரைட்டியாக வேட்டையாடிய ‘சேட்டை’ பட சமாச்சாரத்துக்கு வருவோம்.இந்தியில் ‘டெல்லி பெல்லி’ என்ற பெயரில் ரிலீஸாகி’
‘தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் தயாரிப்பில் அவரது மகள் லட்சுமி மஞ்சு தயாரித்து நடித்திருக்கும் ‘கொண்டேலோ கோதாவரி’ என்கிற. 
தினமும் பஸ் பிடித்து, பல கி.மீ. நடந்து, வேர்த்து, விறுவிறுத்து வேலைக்குப் போய் மாங்கு மாங்கென்று 12 மணி நேரத்திற்கும் மேல் வேலை பார்த்து, மேலாளரிடம் திட்டு வாங்கி...
’
’
Comments
கதைய எதுக்கு சொல்லாதீங்கன்னு சொல்றாங்க, அடுத்து படம் பார்க்கறவன்னுக் கு மொக்கையா இருக்கும்னும்தான்னே....
குசும்பு பண்ணா ரசிக்கிற மாதிரி பண்ணனும், இப்டி கெவ்வலமா பண்ண கூடாது........
படம் எடுக்க தெரியதவன்ன, எவ்வளவு அழகா திட்டுறீங்க, அப்ப உங்க விம்மமர்சனம் பண்ற வேலைய ஒழுங்கா பண்ண வச்சுக்கனும்ல்ல எதுக்கு முக்கால்வாசி பக்கத்துல கதையை எழுதி காலத்தை ஓட்டிக்கிட்டிருகீங்க....
இதுவரை உங்க சினிமா விமர்சனத்துக்கு பெரும் விசிறி நான்........... .அதுவும் பில்லா 2வுக்கு நீங்க எழுதனுது நான் எல்லா பக்கமும் ஷேர் பண்ணிகிட்டு திரிஞ்சேன்... இப்டி டேமேஜ் பண்றீங்க, எவனும் இந்த படத்த ரசிக்க கூடாதுறா அப்டிங்கற மாதிரி இருக்கு விமர்சனம் (அதுவும் ஒரே லைன்ல எல்லா சஸ்பென்ஸையும் உடைக்கிறதுக்கு ரொம்ப திறமை வேனும் பாஸ்(நல்லா வருவேயா நீ).. எப்பயாச்சும் உருபடியா படம் எடுக்கறாங்க, அதுல்ல குண்டா தூக்கி போடுறீங்க.... போங்க பாஸ்...
RSS feed for comments to this post