Monday, May 20th

Last update09:36:14 PM

Profile

Layout

Direction

Menu Style

Cpanel
You are here: 2012 – ஒரு திரைப்பார்வை 01 ‘அவனும் நான் தான் ,இவனும் நான் தான்

‘அவனும் நான் தான் ,இவனும் நான் தான்

  • PDF

வெகுசிலரைத்தான் சினிமாவில் அவதாரம் போல் பார்த்தார்கள். அப்படி அவதாரமாய் வந்தார் பாலா.

சேது’ வெளியானபோது பாலாவை தமிழ்சினிமா தூக்கிக்கொண்டாடிய அளவுக்கு வேறு யாரையும் தூக்கிக்கொண்டாடியதாக நமக்கு நினைவில்லை.தனது முதல் படத்திலேயே இடியும், மின்னலுமாய் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார்.
 
அடுத்து ‘நந்தா’வில் ஈழத்தமிழர் பிரச்சினையை  சரக்குக்கு ஊறுகாய் போல் தொட்டுகொண்ட பாலா’, அதன் மூலம் அதற்கு முன் ‘சாம்பார்’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட சூர்யாவை ஒரு தேர்ந்த நடிகனாக வார்த்தெடுத்து தமிழ் சினிமாவுக்கு தந்தார்.  தனது மூன்றாவது படத்தில் சேதுவையும்,நந்தாவையும் சேர்த்துக்குழைத்து, பிதாமகனில் மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்தார்
சினிமாவுக்கு ஆண்டவனே நான் தான் என்ற நினைப்பில்,மூன்றாவதாக  அவர் ஆணவமாக எடுத்த ‘நான்கடவுள்’ தயாரிப்பாளரை, படத்தின் ஷூட்டிங் நடந்த  அதே கோவிலில் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாக்கினாலும், பாலாவை இந்தியாவின் சிறந்த இயக்குனர் என்று பேசவைத்தது.வெகு சில விமரிசகர்களின் பாராட்டையும், கணிசமான ரசிகர்களின் புறக்கணிப்பையும் பெற்ற படம் அது.

முதல் மூன்று படங்களிலும் லேசாக நட்டு’ கழன்றவர்களைப்பற்றியே மீண்டும் மீண்டும் எடுக்கிறார் என்ற விமரிசனம் மெல்ல ஆரம்பித்தபோது, என் படத்தோட கேரக்டர்ஸ் மட்டுமில்ல, நானே அப்பிடித்தாண்டா என்று 17.6.2011 அன்று உலகுக்கு அறிவித்தார் பாலா.

தமிழ்சினிமா என்னும் தேரை நடுத்தெருவுக்கு  இழுத்துவிட்ட பாலாவின் ‘அவன் இவன்’ அன்றுதான் ரிலீஸானது.

சேதுவில் ராஜ்யஸ்ரீ, விக்ரம் என்ற இரண்டே பைத்தியங்கள் இருந்தார்கள். நந்தாவிலும் கூட சூர்யா மற்றும் அந்தப்படத்தைத் தயாரித்த அபராஜித் ஃபிலிம்ஸ்  என்ற இரண்டே பைத்தியங்கள்தான் இருந்தார்கள்.அடுத்து வந்த நான் கடவுளில் தமிழகம் முழுக்க தேடினாலும் இவ்வளவு பேர் கிடைப்பார்களா  என்று திகைக்கும் அளவுக்கு  படம் முழுக்க பைத்தியங்கள் நிரம்பி வழிந்தார்கள். இந்தத்தொடர்ச்சியின் உச்சக்கட்டமே  ‘அவன் இவன்’.

சுமார் 20 கோடிக்கும் மேல் செலவழிக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்தப்படம் பாலாவை நோக்கி ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பச் சொல்கிறது. இந்த பட்ஜெட்டில் பத்து ‘சேது’ எடுத்திருக்க முடியும். பதினைந்து ‘மவுனகுரு’ எடுத்திருக்க முடியும். இருபது ‘மைனா’ எடுத்திருக்க முடியும் என்கிற போது. 20 கோடி ரூபாயில் இப்படி ஒரு காஸ்ட்லி  குப்பையை எப்படி உங்களால் உருவாக்க முடிந்தது பாலா?

இப்படி தாறுமாறாக செலவழித்து, ‘அவன் இவன்’ மாதிரி ஒரு படத்தை நீங்கள் தருகிற போது, பிதாமகன்’ படத்தில் இடம் பெற்ற பேமஸ் டயலாக்கான ‘லூஸாப்பா நீ’ என்று தயாரிப்பாளர்களை நோக்கி நீங்கள் கேட்பது போலவே தோணுகிறது.

அம்மாவும் பையனும் பேசிக்கொள்ளக்கூடாத அருவருப்பான வசனங்கள்,தெருவில் குடித்துவிட்டு அவர்கள் ஆடும்  நாலந்தரமான குத்துப்பாட்டு, ஒரு உப்புப்பெறாத ஜமீந்தார் கேரக்டரை உருவாக்கி அவரை அம்மணமாக்கி படம் பார்க்க வந்தவர்களை குளிர் ஜுரத்தில் படுக்கவைத்து, டாக்டர்கள் வருமானத்தை அதிகரிக்கவைத்தது,  உட்பட ஏகப்பட்ட ஏரியாக்களில் இவனா அவன் என்று பலரையும் திகைக்க வைத்தார் பாலா..[படத்துக்கு வசனம் எலக்கிய ச்சுடர் எஸ்.ராமகிருஸ்ணன்.இவர் அருவருப்பான விஷயங்களைப் பத்தி பேச மாட்டாராம். ஒன்லி எழுத மட்டுமே செய்வாராம். காசு குடுத்தீங்கன்னா இந்தப்படத்துக்கு எழுதுனதை விட இன்னும் தரைமட்டத்துக்கு எழுதியே தருவாராம்]

இந்தப்பிழையை ஒரே படத்தின் மூலம் , ஜஸ்ட் லைக் தேட்’ துடைத்து எறிந்து விட முடியும் பாலாவால்.இப்போது எடுத்துக்கொண்டிருக்கும் ‘எரியும் தணல்’ படத்தின் மூலமே கூட அது சாத்தியப்படலாம்.

பாலாவை நோக்கிய இந்த விமரிசனம்  எழுதும்போது கூட ஒரு முக்கியமான பழமொழி தான் ஞாபகம் வருகிறது.அதுவும் அவரது ‘நான் கடவுள் ‘ பிச்சைக்காரன் மாதிரி ஒரு பிச்சைக்காரனின் பழமொழி தான்.

’’ஒரு நாளும் பிச்சை போடாத மவராசி இன்னைக்கும் போடலை. தினமும் போட்டுக்கிட்டிருந்த .........யா  இவளுக்கு என்ன ஆச்சி? ’’ மற்றவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ, இது பிச்சைக்காரர்களின் சப்ஜெக்டில் பி.ஹெச்.டி. படித்த உங்களுக்கு புரியும் பாலா.

தன்னை தலைக்குமேலே தூக்கி சுமந்து கொண்டிருந்த தமிழ்சினிமா ரசிகனின் காலுக்குகீழே பாலா தானாகவே தஞ்சமடைந்துகொண்ட படமே அவன் இவன்’. எனவே 2011-ல் தமிழ்சினிமா என்னும் தேரை ‘அவன் இவன்’ படம் மூலம் நடுத்தெருவுக்கு கொண்டு சென்று நிறுத்தியவர் பாலா என்பதை hellotamilcinema.com ஆழ்ந்த அனுதாபங்களுடன் பதிவு செய்கிறது.

Share