சீட் பெல்ட் அணியாமல்,ஈ பாஸ் எடுக்காமல் கொரோனா காலத்தின் உச்சக்கட்ட அவமானத்தை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் இனி படங்களில் நடிப்பதில்லை என்ற உறுதியான முடிவை எடுத்துவிட்டதாக ரங்கராஜ், மாரிதாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான வீடியோ பதிவு ஒன்றை ரங்கராஜ் ‘ரஜினி அப்படி ஒரு முடிவெடுத்தது எப்படி?’ என்ற தலைப்பில் வெளியிட உள்ள அதே நேரத்தில் மாரிதாஸ் குச்சியும் கையுமாக ஒரு விளக்கவுரை தரவுள்ளதாக தகவல்கள் கசிகின்றன.

இதன் முதல் சம்பவமாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை' சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படமானஅண்ணாத்த’ படம் டிராப் ஆகப்போகிறது. சென்னை டிராஃபிக் போலீஸுக்கு அபராதமாக செலுத்திய 100 ரூபாய் போக மீதி சம்பளத்தை ரஜினி திருப்பித் தருகிறேன் என சொல்லிவிட்டார்” என்று புதிதாக தமிழகத்தில் மாடு மேய்க்க வந்திருக்கும் முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலையும் அடித்துக்கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.