மிகுந்த தயக்கத்துக்குப்பின்னர் இயக்குநர் பாலாவுடன் படம் செய்ய ஒத்துக்கொண்ட நடிகர் சூர்யா இப்படத்துக்காக அவருக்கு 5 கண்டிசன்கள் போட்டபிறகே ஒத்துக்கொண்டாராம்.

இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பாலாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது குறித்து பதிவிட்டுள்ள சூர்யா….
என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்…
ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்..
20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்…
அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்…
அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்…

என்று உணர்ச்சி வசப்பட்டு எழுதியுள்ளார்.

இது ஒரு தரப்பு. ஆனால், இன்னொரு பக்கத்தில் இப்படம் செய்ய ஒத்துக்கொள்வதற்கு சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக இழுத்தடித்த சூர்யா,, சில வாரங்களுக்கு முன்பு தனக்கு நெருக்கமான ஒருவர் மூலம் 5 நிபந்தனைகளை தெரிவித்தாராம்.

1. படத்தை தனது 2டி நிறுவனம் தயாரிப்பதால் ‘வர்மா’படத்தில் அடித்தது போல் இஷ்டத்துக்கு கொள்ளயடிக்க முயலக்கூடாது.

2.படப்பிடிப்பின் போது நடிகர் நடிகைகளிடம் நாகரிகமாக நடந்துகொள்ளவேண்டும். குறிப்பாக அவரது பிராண்ட்மார்க் கெட்ட வார்த்தைகளை பிரயோகிக்கக்கூடாது.

3.குடித்துவிட்டு படப்பிடிப்புக்கு வரக்கூடாது.

4. சொன்ன தேதிக்குள் படப்பிடிப்பை முடித்துத்தரவேண்டும். மீறினால் ‘வர்மா’போலவே படம் குப்பையில் போடப்படும்.

5. இனி மறுபடியும் அடுத்த 20 ஆண்டுகளுக்குப் பிறகே கால்ஷீட் கேட்கவேண்டும்.

இவை அத்தனைக்கும் மறுபேச்சின்றி ஒப்புதல் அளித்திருக்கிறார் பாலா.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.