திரைத்துறையினரால் ‘காதல் மன்னன்’ என்று பல காலமாகவே கிசுகிசுக்கப்பட்டு வந்த நடிகர் தனுஷ்  மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்து தனது ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சி அளித்துள்ளார்.

நடிகர் தனுஷ் , நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஆகிய இருவருக்கும் 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

துவக்கத்தில் நல்ல புரிதலுடன் இருந்த இவர்களது வாழ்க்கையில் மெல்ல விரிசல் ஏற்பட்டது. அமலா பால் தொடங்கி தன்னுடன் நடித்த பல பெண்பால்களுடன் நெருக்கமாக இருந்ததாக தனுஷ் அடிக்கடி கிசுகிசுக்கப்பட்டார்.

இந்நிலையில் தங்களுடைய 18 ஆண்டு கால பந்தம் முடிவுக்கு வருவதாக தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில், ஜனவரி 17, 2022 நேற்று இரவு தனித்தனியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஒரு கட்டத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

இத்தகவலால் ரஜினி ரசிகர்கள், தனுஷ் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.