P.K.ரோசி

இன்று கூகுள் வெளியிட்டு இருக்கும் டூடுள் லோகோவில் இடம்பெற்று இருப்பவர்.

மலையாள சினிமாவின் முதல் பெண் நடிகை.

பிறப்பால் ஒரு தலித் பெண்ணான ரோசி மலையாளத்தின் பிரபல இயக்குனரான J.C.டேனியல் இயக்கத்தில் வெளிவந்த “விகதகுமரன்” படத்தில் நடித்த முதல் நடிகையாவார். அதுதான் அவர் நடித்த கடைசி படமாகவும் இருக்க கூடும்.

காரணம் அந்த படத்தில் ரோசி ஒரு நாயர் பெண்ணாக நடித்திருந்தார். ஒரு தலித் பெண் எப்படி நாயர் பத்திரத்தில் நடிக்கலாம் என இவருக்கு எதிராக நாயர் வகுப்பினர் போராட்டங்களை தொடங்க அத்துடன் தலைமறைவாகி விட்டார். அதன்பின் தமிழ்நாட்டில் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இன்று ரோசி அவர்களது பிறந்தநாள்.

ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்னர் உயர்சாதி பெண்ணாக நடித்தார் என்பதற்காக விரட்டியடிக்கப்பட்ட ரோசி இன்று உலகமெங்கும் காணும் வகையில் கூகுளின் லோகோவில் ஒருநாள் இடம்பெற்றிருக்கிறார்.

கூகுள் ❤❤

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.