விஜய் சேதுபதி கேங்ஸ்டராக நடித்த ‘சூது கவ்வும்’ பெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு படத்தில் கேங்ஸ்டராக நடிக்க விருக்கிறார்.

‘ஓரம் போ’.. ‘வா. குவார்ட்டர் கட்டிங்’ போன்ற வித்தியாசமான படங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்கள் புஷ்கர்-காயத்திரி விஜய் சேதுபதியை கேங்ஸ்டராக வைத்து ஒரு படம் இயக்கவிருக்கிறார்கள்.

சசிகாந்த்தின் ஒய் நாட் ஸ்டூடியோ தயாரிக்க இருக்கும் இந்தப் படத்தின் தலைப்பு ‘விக்ரம்-வேதா’. படத்தின் நாயகியை ‘வலைவீசி’ தேடிக்கொண்டிருக்கிறார்கள். படத்தின் முன்தயாரிப்பு வேலைகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. ஜூனில் படப்பிடிப்புக்கு செல்ல இருக்கிறார்கள்.

Related Images: