தாய்லாந்து தலைநகர் பாங் காக்கில் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை போட்டி யில் ஆடவர் 75 கிலோ எடைப் பிரிவில் இறுதிச்சுற்றுவரை சென்ற விகாஸ் கிரிஷன் உஸ்பெகிஸ்தான் வீரர் பெக்டெமிர் மெலிகுஸியேவிடம் தோல்வியடைந்தார். விகாஸுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

நேற்று நாடு திரும்பிய அவர், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தனது அதீத நம்பிக்கை பற்றி அவர் வருத்தப்பட்டார்: “தங்கப் பதக்கம் எப்படியாவது வெல்ல விரும்பினேன். ஆசிய சாம்பியன் இறுதிப் போட்டி மிகக் கடினமான போட்டி என்பதில் சந்தேகமில்லை.

மெலிகுஸியேவைப் பற்றி நான் கேள்விப்பட்டபோது அவருக்கு 19 வயது என்பது தெரியவந்தது. அதனால் அவரை எளிதாக வீழ்த்தி விடலாம் என்ற அதீத நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டுவிட்டது. ஆனால் நானும் 19 வயதில்தான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றேன் என்பதை மறந்துவிட்டேன். மெலிகுஸியேவும் அபாயகரமான வீரர் என்பதை நான் உணர்ந்திருக்க வேண்டும். அந்தத் தோல்வியை எப்படி சமாளிப்பது என்பது கூட எனக்குத் தெரியவில்லை” என்று தனது வருத்தத்தைப் பகிரந்துகொண்டார் விகாஸ்.

வுடுங்க விகாஸ் அடுத்த போட்டியில பாத்துக்கலாம்.

Related Images: