பெங்களூரை சேர்ந்த சிவபிரகாஷ் என்பவர் ‘கில்லிங் வீரப்பன்’ என்ற தலைப்பில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வீரப்பன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் தமிழ் மக்களை குறிப்பாக குரும்பா என்ற மலைசாதி பெண்களை ஆயுதங்கள் தூக்கும் கொள்ளைக்காரர்கள் போல சித்தரிக்கப்பட்டுள்ளது. கன்னட மொழியில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் (மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன்), போலீஸ் அதிகாரி செந்தாமரை கண்ணன் என்ற பெயரில் இந்திய அதிரடிப்படை தலைமை தாங்கி, வீரப்பனை பிடித்ததாக காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த திரைப்படம் வருகிற ஜனவரி 1-ந்தேதி நாடு முழுவதும் வெளியாகும் என்று விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் வீரப்பன் ஒரு கொடூர கொலைகாரன் என்பதை போலவும், 184 பொதுமக்கள், 97 போலீஸ்காரர்கள், 900 யானைகளை கொன்றதாகவும் கதை அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் சில மத ரீதியான காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

இதனால், கண்டிப்பாக மத ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படும். மேலும், இந்த படத்தின் இயக்குனர் ராம்கோபால் வர்மா, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் விதமான காட்சிகளை அமைத்துள்ளார். மேலும் வீரப்பன் மனைவி பலரை கொலை செய்வது போல, படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், உண்மையில் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை. மேலும், இந்த படத்தில் தமிழக போலீசுக்கும், அரசியல்வாதிக்கும் எதிரான கருத்துகளும் இடம் பெற்றுள்ளது. அதேபோல, காவிரி விவகாரத்தில் நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதாக கூறியுள்ளனர்.

இந்த படத்துக்கு சென்னையில் உள்ள தணிக்கை வாரியம் ‘யு’ சான்றிதழை வழங்கியுள்ளது.

இவ்வளவு விஷயங்களைத் திரித்துக் கூறும் இந்தப் படம் வெளியாவதை எதிர்த்துசேலம் மாவட்டம், சாமிநாயக்கன்பட்டியை அடுத்துள்ள பெருமாள்கோவில் கிராமத்தை சேர்ந்த பா.பன்னீர்செல்வி. என்பவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

Related Images: