விஜய் ஆண்டனியை வைத்து சசி இயக்கிவரும் `பிச்சைக்காரன்` படம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் திரைக்கு வருகிறது. இந்தப் படம் சரியாக ஓடாவிட்டால் திரைத்துறைக்கு பை பை சொல்லிவிட்டு சசி விவசாயம் செய்ய ஊருக்கு கிளம்பி விடுவார் என்று அவரது நண்பர்கள் வாட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

`சொல்லாமலே` என்கிற ஒரு உருப்படியான படம் தவிர்த்து `பூ`  `டிஷ்யும்` `ஐந்து ஐந்து ஐந்து` என்று வரிசையாகப் படுதோல்விப் படங்களை இயக்கிவருகிறார் சசி. அதிலும் குறைப்பாக `ஐந்து ஐந்து ஐந்து` படத்தின் மரண தோல்வியால் பரத் என்கிற நடிகரே தமிழ்சினிமாவில் இல்லாமல் ஆகிவிட்டார்.

இந்நிலையில் தன்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய ஒரே காரணத்துக்காக விஜய் ஆண்டனி `பிச்சைக்காரன்` ஆகும் வாய்ப்பை சசிக்கு வழங்கியுள்ளார். தொடர்ந்து இரண்டு வெற்றிப்படங்களில் நடித்த விஜய் ஆண்டனிக்கு `பிச்சைக்காரன்` ஹாட்ரிக் ஆக அமையுமா அல்லது சசியை விவசாயி ஆக்குமா என்பதை அறிய ஒரு வாரம் காத்திருக்கவேண்டியதுதான்.

Related Images: