‘ஓ காதல் கண்மணி’ படம் சுமாராக ஓடி மணிரத்தினம் நெஞ்சில் பால் வார்த்ததைத்  தொடர்ந்து ரிலாக்ஸான மணிரத்னம்., அடுத்த படத்தில்  கார்த்தி, நானி மற்றும் துல்கர் சல்மான் இணைந்து நடிக்க கதையொன்றை ரெடி செய்து தயாரானார்.

 ஆனால், படத்தின் நாயகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மொழிப் படங்களில் பிஸியாக இருப்பதால் சேர்ந்து டேட் கொடுக்காமல் இழுத்தடிக்கவே தலை சுற்றிக் குழம்பிய மணி சரி என்று பல மொழித் திட்டத்தைக் கைவிட்டு தமிழ் மொழியை மட்டும் கான்ஸன்ரேட் பண்ணலாம் என்று முடிவெடுத்துவிட்டார் மணிரத்னம்.

கொடைக்கானலில் உட்கார்ந்து மூளையைக் கசக்கி கார்த்தியை மையமாக வைத்து ஒரு கதை எழுதியிருக்கிறாராம். இப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கப் போகிறது. ‘ப்ரேமம்’ படத்தின் மூலம் அகில உலகப் புகழ் பெற்றுவிட்ட ப்ரேமச் செல்லம் சாய் பல்லவியின் ஹாட்டான மார்க்கெட்டை கச்சிதமாக யூஸ் பண்ண அவரையே  இப்படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்துவிட்டார்.

இப்படத்திலும் தனது ஆஸ்தான இசையமைப்பாளர் ரஹ்மானை   7 பாடல்கள்  போட்டுத் தரும்படி கேட்டுள்ளாராம். எல்லாப் பாடல்களுக்கும் நானே பாட்டு என்று  வைரமுத்து வந்து ஆஜராகிவிட விரைவில் பாடல்கள் கருவாகி உருவாகும் என்று நாடே பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது.

Related Images: