தமிழ்ச் சினிமாவில் கதை சொல்லிகளுக்குத் தான் வெற்றி என்று ஒரு காலத்தில் இருந்ததுண்டு. ஆனால் ஸ்டார்கள் நிறையப் பேர் வர வர இப்போது ‘பத்து நிமிஷத்துல கதை சொல்லுங்க. புடிச்சுருந்தா கன்ட்டினியூ’ என்று உட்காரும் ஹீரோக்கள் பெருகி விட்டார்கள். அந்த திமிருக்காகவே மூன்றாவது படத்திலேயே குப்புறடிச்சும் விழுகிறார்கள் பலர் மார்க்கெட்டில்.

“இரண்டரை மணி நேரம் ஒதுக்குங்க. நான் முழுசா சொல்லணும். ஷாட் பை ஷாட் சொல்லணும்” என்று கேட்டாலும், ஒரு சில ஹீரோக்கள்தான் “ம்…’ என்பார்கள். திருநாள் கதையை ஜீவாவுக்கு அப்படிதான் சொன்னாராம் டைரக்டர் ராம்நாத். “இந்த இடத்துல பேக்ரவுண்ட் மியூசிக் வராது சார். இந்த இடத்துல ஒரு பல்ப் பியூஸ் ஆகியிருக்கும் சார்” என்கிற அளவுக்கு டீட்டெயிலாக அவர் சொல்லி முடிக்க, உடனே ஜீவா வாயிலிருந்து நல்ல செய்தி. “ இநதப் படத்தை பண்றோம் சார்! ”

அதற்கப்புறம் நயன்தாராவிடம் கதை சொல்லப் போயிருக்கிறார் ராம்நாத். அங்கேயும் கதை சொல்ல ரெண்டரை மணி நேரம் டயம் கேட்க மறுப்பேதும் சொல்லாமால் தயாராகிவிட்டார் நயன். முழுக் கதையையும் கேட்டு முடித்ததுமே, “கண்டிப்பா பண்றோம். ஆக வேண்டிய வேலையை பாருங்க’ என்றாராம். ஹீரோக்கள் இப்படி நேரம் ஒதுக்கி கதை கேட்பது இயற்கை. அவசியம். ஆனால் பெரும்பாலும் ஹீரோயின்கள் இப்படியெல்லாம் நேரம் ஒதுக்குவதில்லை. “என் போர்ஷனை மட்டும் சொல்லுங்க. ரொம்ப நேரமா என் பாமரேனியன் குலைச்சுகிட்டேயிருக்கு. நான் அதுகூட டைம் ஸ்பென்ட் பண்ணணும்” என்பார்கள் கூச்சமேயில்லாமல்.

ஹீரோயின்களை ஊறுகாய்ப் போலத் தான் பெரும்பாலான படங்களில் தொட்டுக்கொள்கிறார்கள் என்றாலும் அதிலும் தனது பங்கினை தெளிவாக உணர்ந்து செய்யும் நயன்தாரா டைரக்டர் என்ன சொல்கிறாரோ, அதை தலையாட்டி தலையாட்டி கேட்டுக் கொண்டேயிருக்கிறார். உடனே அதையே ஷாட்டில் செய்தும் ஓ.கே. வாங்கிக் கொள்கிறார்.

சாக்லெட் ஹீரோயினாக இருந்தாலும் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணியில் நயன் இருக்கிறார் என்றால் அது சும்மாவா முடியும் ?

Related Images: