’சீன அதிபர் மாவோவை ரஷ்ய அதிபராக்கி மேடையில் ரகளை செய்த விஜய் நடந்த தவறுக்கு வருந்தி திருந்தியிருக்கிறார்.

விஜய், சமந்தா, எமி ஜாக்சன், நைனிகா, மகேந்திரன், ராஜேந்திரன், பிரபு, ராதிகா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம் ‘தெறி’. அட்லீ இயக்க, கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரித்திருக்கிறார்.இப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சத்யம் திரையரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் இறுதியாக பேசிய விஜய், ரசிகர்களுக்கு ஒரு குட்டிக்கதை கூறினார். அந்த கதையில் “சீன முன்னாள் அதிபர் மாவோ” என்று சொல்லுவதற்கு பதிலாக “ரஷ்ய முன்னாள் அதிபர் மாவோ” என்று கூறிவிட்டார்.

சில இணையதளங்கள் விஜய் முட்டாள்தனமாக உளறியதைக்கூட கண்டுபிடிக்காமல் அப்படியே செய்தி வெளியிட்ட நிலையில், முகநூல், வாட்ஸ் அப்களில் அஜீத் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை கழுவி ஊத்தத் துவங்கினர்.

இந்நிலையில் தான் உளறிக்கொட்டியதை உணர்ந்த விஜய், ‘சீன அதிபரை ரஷ்யா வரை கொண்டுபோனதற்காக வருந்துகிறேன். ரசிகர்களை சுலபமாக சென்று சேருமே என்கிற ஆர்வத்தில் சொல்லப்பட்ட குட்டிக்கதையில் ஒரு குட்டித் தவறு[?] நடந்ததற்காக வருந்துகிறேன்.இனி ஜாக்கிரதையாகப் பேசுவேன்’ என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

Related Images: