’விக்னேஷ் சிவனை மட்டுமல்ல, தமிழக மக்கள் அனைவரையுமே காதலிக்கிறேன்’ என்று நடிகை நயன்தாரா நியூ இயர் ரொமான்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2018 புத்தாண்டுக்காக,எண்ணெய் குளியலுக்கு முன், அவர் தன் கைப்பட எழுதிய வாழ்த்துச் செய்தியின் புகைப்படம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்

“என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிய ரசிகர்களுக்கு என்னுடைய நன்றிகளும், புத்தாண்டு வாழ்த்துக்களும். நீங்கள் என்னை ஆசிர்வதிக்கப்பட்டவளாக்கி இருக்கிறீர்கள். உங்கள் அன்பு என் வாழ்க்கையை அழகாக்கியுள்ளது.   என்னால் முடிந்த அளவு உழைப்பைக் கொடுத்து வருகிறேன். மற்றதை கடவுளிடம் விட்டுவிட்டேன். உங்கள் அன்பால் நான் பொழுதுபோக்கான படங்கள் மட்டுமல்லாது ‘அறம்’ மாதிரியான நல்ல படங்களையும் கொடுக்க முடிந்தது. இந்த நாளில் சினிமா பிரபலங்கள், ஊடகங்கள் என எல்லோருக்கும் நன்றி சொல்கிறேன். இந்த வருடம் மிகச் சிறப்பாக இருக்கும். உங்கள் அன்பால் தான் நான் சினிமாவில் இருக்கிறேன். உங்கள் இதயத்தில் எனக்கும் சிறு இடம் கொடுத்ததற்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

ஆக இனி விக்னேஷ் சிவனுக்கு டஃப் பைட் குடுக்கிறவங்க கோதாவில் இறங்கலாம்.

Related Images: