இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மவிபூஷன் விருதை இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கி அவரை கவுரவித்திருக்கிறது மத்திய அரசு. இதையடுத்து தமிழகத்தின் கொண்டாட்டங்களில் ஒன்றாக ஆகியிருக்கிறது பத்மவிபூஷன்.

இன்றும் முன்னணியில் இருக்கும் அத்தனை இசையமைப்பாளர்களின் இசைக்கூடங்களிலும் தவறாமல் இடம் பெற்றிருக்கிற படம், இளையராஜாவினுடையது. அந்தளவுக்கு தத்தமது மானசீக குருவாக அவரை பின் பற்றி வருகிறார்கள் அத்தனை பேரும். இந்தியாவே கூடி கொண்டாடப் பட வேண்டியவர்தான் அவர். ஆனால் தமிழ் திரையுலகம் ஒன்று கூடி அவருக்கு இன்னும் விழா எடுக்கவேயில்லை. அவ்வப்போது சிறுசிறு பாராட்டுகளோடு முடிந்து போயிருக்கின்றன அந் நிகழ்வுகள்.

இந்த முறை அவரே வேண்டாம் என்றாலும், விடாமல் பற்றி இழுத்து வந்து பட்டத்து மாலை சூட்ட வேண்டும் திரையுலகம். இளையராஜாவின் நடுநிசி நினைவுகளில் கூட எரிச்சலாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் வைரமுத்துவே, ‘காற்றின் பாதை எங்கும் உந்தன் கானம்’ சென்று தங்கும் என்று பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்.

எதிரிகள்… உதிரிகள்… மட்டுமல்ல, அவரை உயிராக மதிப்பவர்கள் என எல்லாரும் சேர்ந்து இளையராஜாவை கொண்டாட வேண்டிய நேரமிது. கூடுங்கள் இசை சொந்தங்களே…

நன்றி; ஆர்.எஸ்.அந்தணன். newtamilcinema.com

Related Images: