மனிதம் பற்றிய உளவியல் தகவல்.
- ஏழாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுதும் நீடிக்குமாம்.
- அடிக்கடி ஒருவர் நினைவு வந்து கொண்டிருந்தால் அவரும் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறாராம்.
- எல்லாவற்றுக்கும் எரிச்சல்படுகிறீர்கள் என்றால் யாரையோ ‘மிஸ்’ பண்றீங்களாம்.
- குழுவாக அமர்ந்திருக்கையில் யாராவது ஜோக் சொன்னால் வாய் விட்டுச் சிரித்துக் கொண்டே யாரைப் பார்க்கிறீர்களோ, அவர் தான் உங்களுக்கு ரொம்பப் பிடித்தவராவர்.
- நாளொன்றுக்கு நான்கைந்து பாடல்களையாவது கேட்பவர்களுக்கு நினைவாற்றல் கூடும், நோய் எதிர்ப்பு சக்தி வளருமாம், மனஅழுத்தத்துக்கான வாய்ப்பு 80 சதவீதம் குறையுமாம்.
- உங்கள் மனதை யாராவது காயப்படுத்திருந்தால், அவரை மன்னிப்பதற்கு உங்கள் மூளை சராசரியாக 6 முதல் 8 மாதங்கள் அவகாசம் எடுத்துக் கொள்ளுமாம்.
- சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து சொல்லாமல் விடுபவர்கள், பயந்தவர்கள் இல்லையாம், புத்திசாலிகளாம்.
- மிக விரைவில் ஏமாற்றத்தை சந்திப்பவர்கள், யாரையுமே நம்பாதவர்கள் தானாம்.
- முன்னாள் காதலர்கள் இருவர் நண்பர்களாக மட்டுமே இருந்தால் – ஒன்று, அவர்களுக்குள் காதல் இருக்கிறது. இல்லையேல், அவர்கள் ஒருபோதும் காதலிக்கவே இல்லை.
- இது கொஞ்சம் சங்கடமான விஷயம் – யார் அதிகம் உபதேசம் செய்கிறார்களோ, அவர்கள் தான் அதிகமான பிரச்சினைகளில் இருக்கிறார்களாம்.
- ஒருவர் ஒரு விடயத்தை செய்யவில்லை என்று அதிக முறைக் கூறி விவாதிப்பவரானால் அதை அவர் செய்திருக்கலாம் என்று
உளவியல் கூறுகிறது. - ஒருவர் அதிகமாக விரல் நகம் கடிப்பவராக இருந்தால் அவர் பதற்ற நிலையில் உள்ளவராவார் (ஆரம்ப உளவியல் பிரச்சினைக்கு உள்ளாகப் போகின்றார்) என்று அர்த்தம்.
- ஒருவருக்கு கோபம் அதிகமாக வருமானால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனக் கருத முடியும். அவர் அந்தப் பதற்றத்தினை குறைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒருவர் அதிகாலையில் எழும்புபவராக இருந்தால் அவருக்கு பல்வேறுப்பட்ட ஆரோக்கியமான விடயங்களும், வாழ்க்கையில் வெற்றி பெறக் கூடிய விடயங்களும் காத்திருக்கும்.
- ஒருவர் பகலில் உறங்கி இரவில் விழித்திருப்பவராக இருந்தால் இவ்வாறானவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
- ஒருவர் அடிக்கடி Mobile phone யை பார்த்துக் கொண்டிருப்பது or Mobile சத்தம் (Notification tones) கேட்டால் உடனடியாக அதைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால் அவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்படிருக்கின்றார் என்று அர்த்தம்.
- ஒரு மனிதன் ஆகக் குறைந்தது 6 மணித்தியாளங்கள் ஆழ்நிலையில் உறங்க வேண்டும். (எந்த ஒரு ஓசைக்கும் எழும்பாத ஆழ்நிலை தூக்கம்) இவ்வாறு தூங்குபவரானால் இவருடைய பல்வேறுப்பட்ட உடல், உளவியல் சார்ந்த நோய்கள் வராது.
- ஒருவர் அதிகமாக Negative Thoughts ( முடியாது/கிடைக்காது/இயலாது) சொல்பவராக இருந்தால் அவர் வாழ்க்கையில் பல்வேறுப்பட்ட ஆசைகள் நிறைவேறாமல் வாழ்ந்து இருப்பார்.
இவர்களே அதிகம் Negative Thoughts இருப்பார்.
நேர்மறை எண்ணம் கொண்டு சிறப்புடன் வாழ்வோம்.
பகிர்வு