தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள எந்த வகையிலேனும் பணம் சம்பாதிக்கலாம் என்று நினைத்தால் என்னவெல்லாம் நடக்கும்? என்பதைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் சொல்லியிருக்கும் படம் ஏஸ்.
மலேசியா சென்று புதிய வாழ்க்கை வாழத் தொடங்கும் நாயகன் விஜய்சேதுபதிக்கு அங்கிருக்கும் நாயகி ருக்மணிவசந்த் மேல் காதல்.காதலிக்குப் பெரிய அளவில் பரிசு கொடுக்க வேண்டும் என்று நினைத்து விஜய்சேதுபதி செய்யும் செயல்கள் பல சிக்கல்களை உருவாக்குகின்றன.அவை என்னென்ன? அவற்றிலிருந்து மீண்டார்களா? இறுருதியில் என்ன நடந்தது? ஆகிய கேள்விகளுக்கு விடையளிப்பதுதான் படம்.
எந்த வேடம் கொடுத்தாலும் அதுவாகவே மாறிப்போகும் விஜய்சேதுபதி இந்தப்படத்திலும் அப்ப்டியே இருக்கிறார்.ஸ்டைலிஷான தோற்றம் மட்டுமின்றி காதல்,மோதல்,நகைச்சுவை ஆகிய எல்லா இடங்களிலும் நன்றாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
நாயகி ரருக்மணி வசந்த் அழகான புதுவரவு.நடிப்பிலும் நன்று.விஜய்சேதுபதியுடனன காதல் காட்சிகளில் கூடுதல் மதிப்பெண் பெறுகிறார்.
யோகிபாபு ஏற்றிருக்கும் வேடமும் அதைச் சிறப்பாகச் செய்துவிட வேண்டும் என்று அவர் காட்டியிருக்கும் முனைப்பும் இரசிகர்கள் வயிற்றைப் பதம் பார்க்கிறது.
நாயகனின் நண்பியாக வரும் திவ்யா பிள்ளை, காவலதிகாரியாக வரும் பப்லு, எதிர்மறையாளராக நடித்திருக்கும் கேஜிஎஃப் அவினாஷ் உள்லிட்டோரும் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.
கிரன்பக்தூர்ராவத் ஒளிப்பதிவில் மலேசியாவின் அழகுகள் மேலும் அழ்காகப் பதிவாகியிருக்கின்றன.காட்சிகளுக்கேற்ற ஒளியமைப்பிலும் நற்பெயர் பெறுகிறார்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் இரசிக்கும்படி அமைந்திருக்கின்றன. சாம்.சி.ஏஸ் பின்னணி இசை படத்தின் தன்மைக்கும்ப் பலம் சேர்க்கும் வண்ணம் அமைந்திருக்கிறது.
படத்தைத் தொகுத்துள்ள பென்னி ஆலிவர்,இரண்டாம் பாதியில் இருக்கும் சில தொய்வுகளைச் சரி செய்திருக்கவேண்டும்.
எழுதி இயக்கியிருக்கிறார் ஆறுமுககுமார்.எடுத்துக் கொண்ட விசயத்தை முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து சொல்ல வேண்டும் என்கிற முனைப்பில் வெற்றி பெற்றிருக்கிறார்.விஜய்சேதுபதீ -யோகிபாபு ஆகியோர் வரும் காட்சிகள் இன்னும் பல காலங்களுக்குப் பேசப்படும் காட்சிகளாக இருக்கும்.இதன் விளைவு இன்னும் சில படங்களில் இக்கூட்டணியை எதிர்பார்க்கலாம்.
ஒரு கன்மான முடிச்சைப் போட்ட பிறகு என்ன நடக்கப் போகிறது? என்பது யூகிக்கக் கூடிய வகையில் இருந்தாலும் கடைசியில் எல்லாவற்றையும் மறக்கடித்து படத்தை இரசிக்க வைத்திருக்கிறார்.
விஜய்சேதுபதி வென்றிருக்கிறார்.
– கதிரோன்