ajith

‘பில்லா 2’ ரிலீஸ் குறித்து தனது ரசிகர்களை விடவும் அதிக டென்சனுக்கு ஆளாகியிருக்கிறார் அஜீத். காரணம் அனைவரும் அறிந்த ‘சகுனிகள் சமாச்சாரம் தான்.

சென்சார் பண்ணுவதில், தேதி போட்டு விளம்பரம் தருவதில், விளம்பர வாசகங்களில் ‘மாமா வர்றியா/’ என்று அஜீத்தை நேரடியாக நக்கலடிப்பதில் தொடங்கி, இப்போதைக்கு ரேஸில் ‘சகுனி’ கையே ஓங்கியிருக்கிறது.

இதுதொடர்பான அஜீத்தின் கோபம் தற்போது முழுக்கமுழுக்க ‘பில்லாவை மொத்தமாக வாங்கி விநியோகிக்கும் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் மீது திரும்பியிருக்கிறது. காரணம் சென்சார் வாங்கிய பிறகும் கூட ‘பில்லா2’ வுக்கு தேதி போட்டு விளம்பரம் தராமல், ஒரு வாரம் தள்ளி ரிலீஸ் பண்ணலாமா என்ற ஆஸ்கார் ரவியின் தயக்கம்தானாம்.

இப்படி ஆஸ்கார் ரவி நினைப்பதிலும் ஒரு உள்குத்து இருக்கிறது என்கிறார்கள். எதிர்காலத்தில் சூர்யா, கார்த்தி கால்ஷீட் வாங்கி படம் பண்ணும் நோக்கத்தில் அவர்களது படங்களை தொடர்ந்து சில ஏரியாக்கள் வாங்கி விநியோகிக்கும் ஆஸ்கார் ரவி, ‘சகுனி’ படத்தையும் மூன்று ஏரியாக்களுக்கு வாங்கியிருக்கிறாராம்.

அப்படி இரு படங்களும் ஒரே தேதியில் ரிலீஸாகும் பட்சத்தில், முதலில் நஷ்டப்படப்போவது இவரே.

இந்த சுயநல நோக்கில்தான் ‘பில்லா2’ வை தள்ளிப்போடமுடியுமா என்று அவர் யோசிக்கிறார் என்பதை தெரிந்துகொண்ட அஜீத், ‘’அப்படி என் விருப்பத்தையும் மீறி ஒருவேளை என் படத்தை தள்ளிப்போட்டால் அவர், தன்வாழ்நாளில் வாங்கிய கடைசி அஜீத் படம் இதுவாகத்தான் இருக்கும் என்று கறாராகச் சொல்லி அனுப்பியிருக்கிறாராம்.

ஆஸ்கார் ரவிச்சந்திரன் ஒரு தெளிவான வியாபாரி. ’சகுனி’களை எதிர்த்து ஒரு டாணாக மாறுகிறாரா அல்லது ‘பில்லா’வை அள்ளாட விட்டு சகுனியாக மாறப்போகிறாரா என்பது இன்னும் சிலமணி நேரங்களில் தெரிந்துவிடும்.

billabilla

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.