தெத்துப்பல் தெரிய, ‘எங்க ஊரு காதலைப்பத்தி என்ன நினைக்கிறே?’ என்று ராமராஜனிடம் ‘புதுப்பாட்டு’ படத்தில் டவுட் கேட்டுவிட்டு, தமிழ்சினிமாவை விட்டு ‘அவுட்’ போன சுமா ரங்கநாத்தை ஞாபகமிருக்கிறதா?’

சுமார் 16 வருட இடைவெளிக்குப்பிறகு, அஜீத்தை வைத்து

விஷ்ணுவர்த்தன் இயக்கும்,இன்னும் பெயர் சூட்டப்படாத படத்தில், கறார் பத்திரிகையாளர் வேடத்தில் மீண்டும் களம் இறங்குகிறார் ஆண்ட்டி சுமா ரங்கநாத்.

‘’ராமராஜனுடன் நடித்த ‘புதுப்பாட்டு’ படத்தினால்தான் நான் அதிகம் பாப்புலரானேன் என்றாலும், கடைசியாக நான் தமிழில் நடித்த படம் ‘உதவும் கரங்கள். நான் தமிழ் சினிமா வேண்டாம் என்று ஒதுங்கிய பிறகு, அவ்வப்போது சிலர் என்னைத்தேடி நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்காமல் இல்லை.

அவ்வாறே விஷ்ணுவர்த்தன் படத்துக்கு அழைப்பு வந்தபோது, முதலில் தயங்கவே செய்தேன். நான் இப்போது இந்தோனேஷியாவின் பாலி தீவில் இருக்கிறேன். பெங்களூருவுக்கு நேரில் வந்த்தும் கதை கேட்டுவிட்டு, எனது முடிவைச்சொல்கிறேனே என்றதும், கொஞ்சமும் யோசிக்காமல் டைரக்டர் விஷ்ணுவர்த்தன், போனிலேயே எனது கேரக்டரைசொல்லி, கதையில் அதன் முக்கியத்துவத்தையும் சொன்னார். வேறு வழி ? உடனே ஒத்துக்கொண்டேன்’’ என்கிற சுமா உடனே பாலி தீவிலிருந்து புறப்பட்டு வந்து கடந்த சனிக்கிழமையிலிருந்தே,பெங்களூருவில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளத் துவங்கிவிட்டார்.

இப்போ, சுமா ஆண்ட்டியைப் பார்த்து நாம் பாடவேண்டிய பாட்டு,’ பெங்களூரு காதலைப்பத்தி என்ன நினைக்கிற?’

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.