பொல்லாத நேரத்துக்கு புடலையும் பாம்பாக மாறும் கதையாக, கைவசம் படமும் இன்றி, அடுத்த படத்துக்கு தேடும் ஆள் நடமாட்டமுமின்றி தவித்துவந்த கார்த்திகாவுக்கு, மடிமேல் இடியாக சமீபத்தில் இன்னொரு செய்தி வந்து இறங்கியிருக்கிறது.

‘கோ’ படத்தில் கமிட் ஆவதற்கு முன்பு, மலையாளத்தில் ஓவியர் ரவிவர்மாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ‘மகரமஞ்சு’ என்ற படத்தில், நடித்திருந்தார் கார்த்திகா.

ஓவியர் ரவிவர்மா வேடத்தில் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான சந்தோஷ் சிவன் நடிக்க, அவரது இரண்டு முக்கிய காதலிகளில் ஒருவராக கார்த்திகாவும், மற்றொருவராக ரவிக்கை அணியாத நித்யாமேனனும் நடித்திருந்தார்கள். இயக்கம் லெனின் ராஜேந்திரன்.

இயல்பாகவே செக்ஸ் காட்சிகள் தூக்கலாக கொண்ட, அதே சமயம் டாகுமெண்டரி தன்மைகள் அதிகம் கொண்ட இந்தப்படம் எப்படியும் சர்வதேச படவிழாக்கள் தாண்டி வேறு எங்கும் திரையிடப்படப்போவதில்லை என்கிற ஒரே காரணத்துக்காக தன் மகளின் கிளாமர் காட்சிகளுக்கு ஓ.கே சொல்லியிருந்தார் ராதா.

ஆனால் சமீப காலத்தில் தெலுங்கில், நித்யாமேனன், கார்த்திகா மற்றும் சந்தோஷ் சிவனுக்கென்று ஒரு சிறிய அளவிலான மார்க்கெட் உருவாகியிருப்பதை அறிந்துகொண்ட ஆந்திரப்பெண்மணி ஒருவர் படத்தை சைலண்டாக தெலுங்கில் டப் செய்து ‘சந்தோஷ் சிவன், கார்த்திகாவின் சல்லாபக்காட்சிகள்’ மேலாடையின்றி கலக்கும் நித்யா மேனன்’ என்கிற ரீதியில் பட ஸ்டில்களை ஃப்ரெஷ்ஷாக வெளியிட்டு ‘ஒரு வெளம்பரங்க’ பண்ண ஆரம்பித்துவிட்டார்.

இவ்வளவு நாளும் டென்சனில் நகத்தைக் கடித்துக்கொண்டிருந்த கார்த்திகா, இப்போது விரலையே கடிக்கும் வெறியோடு இருக்கிறாராம், அதாவது படத்தை டப் செய்து வெளியிட இருக்கும் பெண்மணியான கண்மணியின் விரலை.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.