‘நீதானே என் பொன் வசந்தம்’ முடிந்தவுடன், ஏ.ஆர்.ரகுமான் இசையில், விஜயை வைத்து கவுதம் இயக்குவதாக இருந்த ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’ படம் நிரந்தரமாகக் கைவிடப்பட்டது’ என்று கவுதம் வாசுதேவ மேனனே அறிவித்தார்.

தனது ‘துப்பாக்கி’ படப்பிடிப்பு முற்றுப்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், கவுதமிடம் ஒன்லைனாக மட்டுமே கேட்டிருந்த ‘யோஹனின் முழுக்கதையையும் சொல்லச்சொல்லி, விஜய் பலமுறை தகவல் அனுப்பியும் கவுதம் கண்டுகொள்ளாமல் இருந்தாராம்.

‘ஏன் முழுக்கதையையும் கேக்காம நடிக்கமாட்டாரா? முருகதாஸ் முழுக்கதையும் சொல்லியா ‘துப்பாக்கி’ ஷூட்டிங் போனாங்க? என்பது கவுதம் தரப்பு கேள்வி.

இதை ஒட்டி, இருதரப்புக்கும் இடையே, ஒரு மந்தமான மவுனம் நிலவிய நிலையில், திருட்டு டி.விடி. புகழ் ஏ.எல் .விஜயின் ஒரு கதையை ஓ.கே. செய்து, கவுதமுக்கு செக்மேட் வைத்தார் விஜய்.

விஜயின் இந்த போங்கு ஆட்டத்தை சற்றும் எதிர்பாராத கவுதம் நேற்று தனது ட்விட்டரில், காரணம் எதையும் சொல்லாமல், ‘ விஜயை வைத்து நான் இயக்குவதாக இருந்த ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’ ஒரு அத்தியாயம் கூட துவங்கப்படாமல் முடிவுக்கு வந்தது’ என்று அறிவித்தார்.

பல மாதங்களுக்கு முன்பு, இதே போன்ற ஒரு கசப்பான சம்பவத்தை அஜீத்துடனும் சந்தித்தித்திருந்த கவுதம், தற்போது விஜய்க்காக தயார் செய்து வைத்திருந்த ‘யோஹன்’ கதையை அஜீத்தை வைத்து இயக்க தூது அனுப்பி இருப்பதாக, இருதரப்பிலிருந்தும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.